search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயணம்"

    • 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று வருகிறார்.

    200-வது தொகுதியாக துறைமுகம் தொகுதியில் கடந்த 11-ந்தேதி அண்ணாமலை நடை பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடை பயணம் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    தரைப்பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதே என்று நினைத்து பா.ஜனதா மீனவர் அணி சார்பில் இன்று நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸ் அனுமதிக்காக அணுகி இருக்கிறார்கள். உடனே போலீஸ் தரப்பில் எத்தனை படகுகள் கலந்து கொள்கிறது என்று கேட்டுள்ளார்கள்.

    300 என்றதும், 100 ஆக குறைத்து கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் பரவாயில்லை. இனி பிரச்சினை இல்லை என்று கருதி 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் தரப்பில் இருந்து 8 கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைத்தனர்.

    * எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?

    * யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டதா? பதிவு எண் என்ன?

    * யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதித்துள்ளதா?

    * கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?

    * கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

    * யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?

    * பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?

    * விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?

    கேள்விகளை பார்த்து மீனவர்கள் மயங்கி விழாத குறைதான். மீனவர்களிடம் நீந்த தெரியுமா? என்று கேட்டால் யாரிடம் போய் சான்றிதழ் வாங்க முடியும். படகுகளின் பதிவு எண்ணை கொடுத்தால் மானியம் ரத்தாகி விடுமோ என்ற பயம். மொத்தத்தில் தரையிலோ? தண்ணீரிலோ? எங்கும் யாத்திரை நடத்த தடைதான் போங்கள் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

    இதையடுத்து இன்று நடைபெற இருந்த கடல் தாமரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது அசாம் மாநிலத்தில் நடைபயணம் செய்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்க, பா.ஜனதா மாநில அரசு மறுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த நிலையில் மக்களை நடைபயணத்தில் பங்கேற்கக் கூடாது என அசாம் மாநில அரசு மிரட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலம் பிஸ்வாநாத் சாரியாலியில் நடைபெற்ற நடைபயணத்தின்போது மக்களிடையே ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த பாத யாத்திரை பயணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மக்களை அசாம் மாநில அரசு மிரட்டுகிறது. ஆனால், மக்கள் பா.ஜனதாவுக்கு பயப்படவில்லை.

    இந்த நடைபயணத்தின்போது நாங்கள் நீண்ட நேரம் பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் 7 முதல் 8 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிரதிநிதிகளுடன் பேச வேண்டியுள்ளது. மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை கேட்க வேண்டியுள்ளது. பின்னர், உங்களுடைய பிரச்சனைக்காக போராட வேண்டியுள்ளது. இதுதான் இந்த நடைபயணத்தின் இலக்கு.

    தேர்தல் வரும்போது பா.ஜனதாவை காங்கிரஸ் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும். மிரட்டல் இருந்த போதிலும் முன்னோக்கி சென்று மக்களுக்காக போராட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    • புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
    • ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன்.

    ஐதராபாத்:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அயோத்தி மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ராமர் பக்தர் ஒருவர், அயோத்தி ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை சுமந்தபடி அயோத்திக்கு நடந்தே செல்கிறார்.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஐதராபாத்தை சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி (வயது 64). தீவிர ராமர் பக்தரான இவர், அயோத்தியில் உள்ள சாமி ராமருக்காக ரூ.65 லட்சம் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை கொண்டு செல்ல முடிவு செய்தார்.

    மேலும் அதனை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புனித நடை பயணமாக செல்ல திட்டமிட்டார்.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார்.

    அவர் தனது பயணத்தின் இடையே லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் சீனிவாச சாஸ்திரி, தனது பயணத்தை சில நாட்கள் ஒத்தி வைத்து இருந்தார்.

    பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பதால் தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுபற்றி சீனிவாச சாஸ்திரி கூறுகையில், 'ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை, அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்துகொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். இப்போது எனது தந்தை இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப்பயணமாக வந்துள்ளேன்.

    இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்று அடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.

    ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்துள்ளேன். எனது மகன் சல்லா பவன் குமார். சவுண்ட் என்ஜினீயரான அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்துள்ளார் என்றார்.

    • உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் `ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும். இதுபோன்ற பணிச்சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில், கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதை செய்ய பழகுங்கள்.

    10 ஆயிரம் காலடி நடைபயணம்

    ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் காலடி (ஸ்டெப்ஸ்) என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ௧௦ ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

    தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்

    தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதேபோல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளில் இருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். `நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அரைப்பக்க அளவில் இருந்து எழுத துவங்குங்கள். 100-வது நாள், 50 பக்க அளவு கொண்ட குறுநாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

    காதலிக்க பழகுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.

    நண்பர்களுடன் சமூக வலை தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதுக்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமை நபராக உங்களை நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.

    எதை செய்யக் கூடாது?

    வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

    அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

    கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திடீரென அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவசம் போர்டு, கேரள போலீசார் திணறி வருகின்றனர். சபரிமலைக்கு எரிமேலி, நிலக்கல், பம்பை வழியாக ஒரு பாதையும், எரிமேலியில் இருந்து அலுதாநதி, காளைகட்டி, கல்லிடம்குன்று வழியாக நடைபாதையும், வண்டிபெரியாறு வல்லக்கடவு, புல்மேடு, சத்திரம் வழியாக ஒரு பாதையும் என 3 பாதைகள் உள்ளன.

    பம்பையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் புல்மேடு வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கடந்த 2 நாட்களாக சத்திரம், புல்மேடு வழியாக அதிகளவு பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குமுளி, வண்டிபெரியாறில் இருந்து சுமார் 14 கி.மீ தூரத்திற்கு ஜீப்வசதி உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ வனப்பகுதியில் நடந்து சென்றால் சபரிமலை சன்னிதானத்தை அடைந்து விடலாம்.

    மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    • ற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
    • முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி யில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப யணம் கடந்த ஆண்டு மேற்கொண்டார். நடைப யணம் மேற்கொண்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை யொட்டி திருவட்டார் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆற்றூர் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி சந்திப்பு வரை இந்தியா ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், மாவட்ட பொதுச்செயலா ளர் ஜான் இக்னேசியஸ், மாவட்ட செயலாளர்கள் பெனட், ஆற்றூர் குமார், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
    • நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்க ப்பட்டது தனி சிறப்பாகும்.

    இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைல க்காப்பு சாற்றப்ப டுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இதனால் அன்றைய தினம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    இன்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    பல பக்தர்கள் நேற்று இரவே கோவிலுக்கு வந்து தங்கினர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் நடைபயணமாக வந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டன. பக்தர்கள்

    நீண்ட வரிசையில்நின்று அம்மனை மனம்உருகி தரிசித்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாவிலக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

    இன்று மதியம் வரை மாரியம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    இன்று முழுவதும் கணக்கி ட்டால் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுகடங்காத கூட்டம் காணப்படுவதால் ஒழுங்குப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.
    • அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.

    கன்னியாகுமரி :

    தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த நாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத துறவிகள் காந்திய வழியில் அமைதி நடைபயணம் நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி இந்த நடை பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்துக்கு புத்த மத துறவி இஸ்தானி தலைமை தாங்கினார். புத்த மதப்பெண் துறவிகள் லீலாவதி, கிமுரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைதி நடைபயணத்தை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த புத்தமத துறவிகளின் அமைதி நடைபயணம் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, நாங்கு நேரி, சங்கரன்கோவில் ராஜபாளையம், கல்லுப்பட்டி வழியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.

    இந்த அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.

    • இன்று மாலை நடக்கிறது
    • ராகுல்காந்தி நடைபயண ஓராண்டு நிறைவு

    கன்னியாகுமரி :

    ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு "ஜோடா யாத்திரை" என்ற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதனை நினைவு கூறும் வகையில் கொட்டாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இன்று மாலை காங்கிரசாரின் நடைபயணம் நடக்கிறது.

    கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலை முன்பு இருந்து இந்த நடைபயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த நடை பயணத்துக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமை தாங்குகிறார். இந்த நடைபயணத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    கொட்டாரத்தில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் பெருமாள்புரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் சென்று நிறைவடைகிறது.

    • முதல்கட்ட நடைபயணத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மொத்தம் 178 கிலோமீட்டர் நடந்தார்.
    • பயணத்தின்போது தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார்.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    மொத்தம் 3 கட்டங்களாக 6 மாதத்திற்கு அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம் வழியாக கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி காரைக்குடி சென்றார். பின்னர் மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 4, 5-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

    இதையடுத்து கன்னியாகுமரி சென்ற அவர் அங்கு நடைபயணத்தை முடித்த பின்னர் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து 22-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் சென்றார். நெல்லை டவுனில் கடந்த 22-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை தனது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நடைபயணத்தில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார்.

    இவ்வாறாக மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். இதில் 7 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும். இந்த முதல்கட்ட நடைபயணத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மொத்தம் 178 கிலோமீட்டர் நடந்தார். இந்த பயணத்தின்போது தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் அண்ணாமலை தனது 2-ம் கட்ட நடைபயணத்தை இன்று மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி அண்ணாமலை வந்தார். அங்கிருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

    அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார். அதன்படி மாலை 3 மணிக்கு பொட்டல்புதூரில் தொடங்கி 5 மணிக்கு கடையம் பஸ் நிலையத்தில் நடைபயணத்தை முடிக்கிறார். தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தடைகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கடையநல்லூரில் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கி சிந்தாமணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் தொடங்கியிருப்பதையொட்டி தென்காசி மாவட்ட பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
    • 2-வது கட்ட நடைபயணம் தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் நடை பயணத்தை நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் தொடங்கிய அவர், நேற்று 2-வது நாளாக வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் சென்றார். இன்று அவர் நடைபயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை மாலை நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேட்டை பாறையடி காலனி பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார். இந்த நடைபயணமானது வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக நயினார் குளம் சாலையில் சென்று டவுன் ஆர்ச்சில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்கிறது. அங்கிருந்து பாரதியார் தெரு வழியாக சென்று வாகையடி முனையில் நடைபயணம் முடிவடைகிறது.

    அங்கு வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து முதல் கட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு அவர் சென்னை புறப்படுகிறார்.

    இதனையொட்டி பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து 2-வது கட்ட நடைபயணம் தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.

    ×