search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசும்பொன் பாண்டியன்"

    • எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்.
    • பசும்பொன் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் ஐனநாய கத்தை நிலைநிறுத்திட எதிர் கட்சிகளின் இந்தியாக் கூட் டணி மக்களிடையே செல் வாக்கு பெற்று வருவதோடு நாளுக்கு நாள் வலிமையாக வருவதை சகித்துக் கொள்ள முடியாத மோடி அரசு மக்களை திசை திருப்பிடும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறது.

    மோடி அரசின் ஊழல் களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காகவும் ஒரே தேர்தல் என்ற போலி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது .இது ஆர்எஸ்எஸ்சின் 100ஆண்டு கனவு திட்டமாகும் இந்த கனவு நிச்சயமாக பலிக்கப் போவது இல்லை.

    இந்திய நாடு என்பது பல் வேறு ஒன்றியங்களின் கூட் டாச்சி என்ற தத்துவத்திற்கு இது வேட்டு வைப்பதாகும் இதனால் மாநிலங்களின் உரிமைகளை பறித்திடு வதற்கு வழிவகையாகும், ஐனநாயகத்தை சீர்குலைப் பதற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஐனநாயக கட்ட மைப்புக்களை சீர்குலைத் திடும் வகையில் நாட்டை சர்வதிகாரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் எதே சதிகாரமாக மோடி அரசின் ஒரே தேர்தல் செயல்பாடு அமைந்துள்ளது.

    ஆகவே 2024 நாடாளு மன்ற தேர்தலுடன் தமிழகத் திற்கும் தேர்தல் வந்து விடும் என்ற நட்பாசையில் அண்ணாவின் கொள்கை களை மறந்து திராவிட இயக்க சித்தாதங்களை துறந்து மாநில உரிமை களுக்கு வேட்டு வைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதும் பதவி பேரா சைக்காக என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே திட்டத்தை எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்த போது எதிர்த்தார். இப்போது ஆதரிப்பது பதவி பித்திற்கு என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் மோடி அரசிற்கு சேவகம் செய்யும் அடிமைக ளாக செயல்பட்டவர்களுக்கு அண்ணாவின் மாநில உரிமைகள் பற்றி தெரிய நியாயம் இல்லை புரட்சித் தலைவரும், பரட்சித்தலைவி யும் மாநில உரிமைகளுக்காக போராடியதை மறந்து பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போட்டி போட்டு ஒரே தேர்தல் அறிவிப்பை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கும் தலைவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    இந்தியாவில் இனிமேல் தேர்தலே இல்லை சர்வதி கார அதிபர் முறை வரும் என்று மோடி அறிவித்தாலும் அதையும் ஆதரிப்பவர்களாக இவர்கள் செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை.திராவிட இயக்க உயிர் மூச்சுக் கொள் கையான மாநில சுயாட்சி கொள்கையை டெல்லிக்கு காவு கொடுத்து விட்டு அண்ணா பெயரில் கட்சி நடத்துவது வெட்ககேடான செயலாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-

    மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை இந்நிலையில் தான் மனிதாபிமான உணர்வோடு மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் முன் வந்துள்ளதை அ.தி.ம.மு.க. வரவேற்கிறது,

    இந்நிலையில் மத்தியில் மக்கள் விரோத பா.ஜனதா மோடி அரசுக்கு எதிராக அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரு பான்மை மக்களை பா.ஜ.க. வினர் திசை திருப்ப முயல் கின்றனர்.

    மணிப்பூர் தொடங்கி ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெறுப்பு பேச்சு கலவரத்தை தூண்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத் தோடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கி உள்ளார். அவரது நடைப் பயணம் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

    அண்ணாமலையும் அவருடன் வரும் கும்பல்களும் தமிழகத்தில் அமைதியாக வாழும் சிறுபான்மை மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார்.

    தமிழக அரசு உடனடியாக விழித்து கொண்டு ஹரி யானா, மணிப்பூர், டில்லி போல் அல்லாமல் கல வரத்தை தடுத்திட அண்ணா மலை கலவர நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டுமென வேண்டுகி றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக் கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் சே.பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ரோம்நகர் தீப்பிடித்து எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த தைப் போல இந்திய ஒன்றி யம் முழுவதும் பா.ஜ.க. வினால் வன்முறைத் தீ பற்றி எரிகிறது மணிப்பூர் வன்முறையை உடனே தடுத்து நிறுத்தா விட்டால் உச்ச நீதிமன்றமே தலையிடும் என தலைமை நீதியரசர் ஒன்றிய அரசை எச்சரித்தற்கு பிறகு பிரதமர் பட்டும் படா மலும் மணிப்பூர் கலவரம் குறித்து சில நொடிகளில் பேட்டியளித்துச் சென்ற காட்சியை உலகமே எள்ளி நகையாடுகிறது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கும் பிரதமரின் செய லுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    இதை மூடி மறைப்ப தற்காக அமைதிப் பூங்கா வான தமிழகத்தில் பாதயாத் திரை என்ற பெயரில் சொகுசு வாகனத்தில் அண்ணாமலை பயணம் சென்று வருகிறார் தமிழ் மண்ணைப் பொறுத்தளவில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையில் சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், இன உரிமை, மாநில சுயாட்சி,இந்தியக் கூட்டாச்சி ஆகிய கோட் பாடுகளில் பேணிக் காத்து வருகிறது.

    கவர்னர் ரவியும் அண்ணாமலையும் தினமும் புலம்பி வருவதை நாட்டு மக்களும் திராவிட இயக்க மும் சிறிது கூட அவர்களை பொருட்படுத்தவில்லை, திராவிட இயக்கத்தின் கொள்கையில் தமிழக மக்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக திகழ்ந்து வரு கிறார்கள். மணிப்பூரில்

    இரு பழங்குடி இனப்பெண் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு 80 நாட்களுக்கு பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்துள்ளது அவ்விரு பெண்களையும் காவல்துறையினரே போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் இது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையினர் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது இதை விசாரிக்க முன்னாள் நீதிபகள் கொண்ட சிறப்பு புலனாய் வுக் குழு அல்லது ஒரு சிறப்பு குழுவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப் படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளது வரவேற்கத்தாகும்.இது பிரதமர் மோடிக்கும், மணிப்பூர் மாநில பாஜக அரசிற்கும் பெருத்த அவமா னமாகும், பா.ஜ.க.விற்கு ஏற் பட்டிருக்க கூடிய அவமா னங்களை மூடி மறைப்ப தற்காக பாதயாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அண்ணாமலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    இத்தகைய நாடக அரசி யல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை 2024 தேர்தலில் பாஜகவிற்கு தமிழ் மண் சரியான பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தினார்.
    • அதை யார் நடத்துவது என்பது தான் முக்கியமானது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, வைகாசி விசாகம் என தொடர்ந்து பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்

    அதுபோல் மலைக் கோவில் போகர் சன்னதி ஜீவ சமாதியில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம். போகர் 18 சித்தர்க ளில் மிக முக்கியமான சித்தராவார். போகரின் ஜீவ சமாதி சன்னதி மலைக் கோவில் அருகே அமைந்துள் ளது. ஆண்டுதோறும் மே 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலை யத்துறையின் கட்டுப்பாட் டில் உள்ள போகர் ஜீவ சமாதியில் போகர் ஜெயந்தி விழா நடத்தப்போவதாக சில தனியார் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. போகர் ஜெயந்தி விழாவை நடத்த லாம். அதை யார் நடத்துவது என்பது தான் முக்கிய மானது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதி யில் அரசின் அறநிலையத் துறை சார்பில் போகர் ஜெயந்தி விழாவை நடத்து வதே சரியானதாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறி உள்ளார்.
    • ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழகத்தின் அமைதியை யும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் வருகிற 6-ந்தேதி நடை பெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்படியான நடவ டிக்களை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியல் அடிப்படையில் வர லாற்றை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளராக தன்னுடைய கடமையை செய்து வருகிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரசாரக்காரராக செயல்படலாம்.

    மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பொறுப்பேற்றுள்ள ஒருவர், அரசியல் சாச னத்தின் சாரத்திற்கு ஏதிராக பேசுவதும், செயல்படு வதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி நாகர்கோவிலில் கவர்னர் பேசியது வரலாற்று திரிப்பு வேலையாகும்.

    இன்றைய குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி ஆளுநர் கூறுவதற்கு நேர் எதிர்மாறான வரலாறாக தான் உள்ளது. பெண்கள் மேலாடை அணிவது கூட தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தோள் சேலை போராட்டம் நடைபெற்று 200ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து ஆளுநர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அன்று எல்லாம் உன்னதமாக இருந்தது என்றும், மேற்கத்தியர்கள் தான் தவறான கதையை கட்டி விட்டார்கள் என்றும் பழமைக்கு பட்டுத்துணி போர்த்துகிறார் ஆர்.என்.ரவி. தீண்டாமை கொடுமை, பாராமை என்ற கொடுமையும் இருந்தது.

    இதனால் தான் அந்த மண்ணில் அய்யங்காளை, நாராயண குரு, வைகுண்ட சாமிகள் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் உருவாகி கேரளத்தில் பெரும் இயக்கங்களை முன்னெடுத்தார்கள். தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

    இதையெல்லாம் மறைத்து ஒரு புல்லைக்கூட கிள்ளிப்போடாத சனாதன கூட்டத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி நடத்தும் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி டெண்டர் எடுத்துள்ளதாக பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு எதிராக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். இந்த இயக்கம் தமிழகத்தில் வலிவோடும், பொலிவோடும் ஜெயலலிதா காலம் வரை இருந்தது. இந்த இயக்கத்தில் தற்போது யார் தலைமை பொறுப்பை ஏற்பது என்பதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உச்சகட்ட மோதல் வலுத்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் பலத்தோடு அரசியல் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதிகார போதையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற துடிக்கிறார்‌. தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை டெண்டர் எடுத்து எடப்பாடி பழனிசாமி மகுடம் சூட்டியுள்ளார்.அவரது இந்த அரசியல் வியூகம் மக்கள் மன்றத்தில் எடுபடப்போவதில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள் கட்சி மோதல், சாதி ரீதியான மோதலாக உருவாகி விடக்கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. தற்போது திராவிட இயக்கங்கள், பாரதிய ஜனதாவை வீழ்த்த ஒரே அணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×