search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poker jayanti"

    • பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தினார்.
    • அதை யார் நடத்துவது என்பது தான் முக்கியமானது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, வைகாசி விசாகம் என தொடர்ந்து பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்

    அதுபோல் மலைக் கோவில் போகர் சன்னதி ஜீவ சமாதியில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம். போகர் 18 சித்தர்க ளில் மிக முக்கியமான சித்தராவார். போகரின் ஜீவ சமாதி சன்னதி மலைக் கோவில் அருகே அமைந்துள் ளது. ஆண்டுதோறும் மே 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலை யத்துறையின் கட்டுப்பாட் டில் உள்ள போகர் ஜீவ சமாதியில் போகர் ஜெயந்தி விழா நடத்தப்போவதாக சில தனியார் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. போகர் ஜெயந்தி விழாவை நடத்த லாம். அதை யார் நடத்துவது என்பது தான் முக்கிய மானது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதி யில் அரசின் அறநிலையத் துறை சார்பில் போகர் ஜெயந்தி விழாவை நடத்து வதே சரியானதாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
    • தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    பழனி:

    பழனியில் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். போகர் ஜீவ சமாதியில் இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த விழாவை ஸ்ரீமத் போகர் ஆதீனம் பாத்திரசாமி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

    இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணை ஆணையர் நடராஜன், போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போகர் ஜெயந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தெரிவிக்கையில்,

    போகர் சமாதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தடை விதிக்க ப்பட்டது ஏன்? என்பது பக்தர்கள் அதிர்ச்சியடை ந்துள்ளனர். பழனி மலையில் அமைந்திருக்கும் போகர் ஜீவ சமாதியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களுடைய காணிக்கையை செலுத்த அங்கே உண்டியல் வைக்க வில்லை. ஆனால் பழனி முருகன் கோவில் உண்டியலில்தான் காணி க்கை செலுத்துகி ன்றனர்.

    போகர் ஜெயந்தி விழா நிறுத்தப்பட்டால் அதுவும் ஆகம விதி மீறல்தான். ஆகம விதி மீறல் நடந்தால் அது ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் பழனி கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை வடிவமைத்த போகருக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்டாயுதபாணி சுவாமியின் கோபத்திற்கும் கட்டாயம் ஆளாக நேரிடும். கடந்த ஆண்டும் இதே போல போகர் ஜெயந்தி விழா நடத்தக்கூடாது என்பதற்காக இடையூறு ஏற்படுத்தினர்.

    சித்தர் வழிபாட்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொ ள்ளக்கூடாது எனவே தடை விதிப்புக்கு எதிராக வருவாய் கோட்டாட்சியரி டம் மனு அளித்துள்ளோம். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், போகர் ஜீவசமாதி கோவில் புலி ப்பாணி ஆசிரமம் கட்டுப்பா ட்டில்தான் தற்போது வரை உள்ளது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறையும், பழனி கோவில் நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

    இது முற்றிலும் சட்டத்துக்கும், ஆன்மீகத்துக்கும் எதிரானது. போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் தண்டாயு தபாணி சுவாமியின் கோப த்துக்கு ஆளாக நேரிடும். தமிழக அரசும், இந்து சமய அறநிலை யத்துறையும், பழனி தேவஸ்தானமும் கடந்த ஆண்டைப்போலவே வருகிற 18-ந் தேதி போகர் ஜெயந்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    ×