search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumpon Pandian"

    • எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்.
    • பசும்பொன் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் ஐனநாய கத்தை நிலைநிறுத்திட எதிர் கட்சிகளின் இந்தியாக் கூட் டணி மக்களிடையே செல் வாக்கு பெற்று வருவதோடு நாளுக்கு நாள் வலிமையாக வருவதை சகித்துக் கொள்ள முடியாத மோடி அரசு மக்களை திசை திருப்பிடும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறது.

    மோடி அரசின் ஊழல் களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காகவும் ஒரே தேர்தல் என்ற போலி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது .இது ஆர்எஸ்எஸ்சின் 100ஆண்டு கனவு திட்டமாகும் இந்த கனவு நிச்சயமாக பலிக்கப் போவது இல்லை.

    இந்திய நாடு என்பது பல் வேறு ஒன்றியங்களின் கூட் டாச்சி என்ற தத்துவத்திற்கு இது வேட்டு வைப்பதாகும் இதனால் மாநிலங்களின் உரிமைகளை பறித்திடு வதற்கு வழிவகையாகும், ஐனநாயகத்தை சீர்குலைப் பதற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஐனநாயக கட்ட மைப்புக்களை சீர்குலைத் திடும் வகையில் நாட்டை சர்வதிகாரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் எதே சதிகாரமாக மோடி அரசின் ஒரே தேர்தல் செயல்பாடு அமைந்துள்ளது.

    ஆகவே 2024 நாடாளு மன்ற தேர்தலுடன் தமிழகத் திற்கும் தேர்தல் வந்து விடும் என்ற நட்பாசையில் அண்ணாவின் கொள்கை களை மறந்து திராவிட இயக்க சித்தாதங்களை துறந்து மாநில உரிமை களுக்கு வேட்டு வைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதும் பதவி பேரா சைக்காக என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே திட்டத்தை எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்த போது எதிர்த்தார். இப்போது ஆதரிப்பது பதவி பித்திற்கு என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் மோடி அரசிற்கு சேவகம் செய்யும் அடிமைக ளாக செயல்பட்டவர்களுக்கு அண்ணாவின் மாநில உரிமைகள் பற்றி தெரிய நியாயம் இல்லை புரட்சித் தலைவரும், பரட்சித்தலைவி யும் மாநில உரிமைகளுக்காக போராடியதை மறந்து பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போட்டி போட்டு ஒரே தேர்தல் அறிவிப்பை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கும் தலைவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    இந்தியாவில் இனிமேல் தேர்தலே இல்லை சர்வதி கார அதிபர் முறை வரும் என்று மோடி அறிவித்தாலும் அதையும் ஆதரிப்பவர்களாக இவர்கள் செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை.திராவிட இயக்க உயிர் மூச்சுக் கொள் கையான மாநில சுயாட்சி கொள்கையை டெல்லிக்கு காவு கொடுத்து விட்டு அண்ணா பெயரில் கட்சி நடத்துவது வெட்ககேடான செயலாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி டெண்டர் எடுத்துள்ளதாக பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு எதிராக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். இந்த இயக்கம் தமிழகத்தில் வலிவோடும், பொலிவோடும் ஜெயலலிதா காலம் வரை இருந்தது. இந்த இயக்கத்தில் தற்போது யார் தலைமை பொறுப்பை ஏற்பது என்பதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உச்சகட்ட மோதல் வலுத்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் பலத்தோடு அரசியல் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதிகார போதையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற துடிக்கிறார்‌. தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை டெண்டர் எடுத்து எடப்பாடி பழனிசாமி மகுடம் சூட்டியுள்ளார்.அவரது இந்த அரசியல் வியூகம் மக்கள் மன்றத்தில் எடுபடப்போவதில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள் கட்சி மோதல், சாதி ரீதியான மோதலாக உருவாகி விடக்கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. தற்போது திராவிட இயக்கங்கள், பாரதிய ஜனதாவை வீழ்த்த ஒரே அணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். மோதலால் இரட்டை இலை முடங்கும் என பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் தற்போது அதிகார மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமுமில்லை தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழு கூடுவதற்கு சட்ட ரீதியாக எந்த வாய்ப்புகளும் இல்லை. எனவே அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் பூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமும் முடங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிர்வாகிகள் அதிகம்பேர் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் 14 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. எனவே இந்த மோதலால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்தவன் என்ற முறையில் தெளிவாகக் கூறுகிறேன். அ.தி.மு.க. சட்ட விதி 43-வது பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

    பொதுசெயலாளர் பதவியை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக யாரும் தேர்வு பெற முடியாது. அ.தி.மு.க.வில் தற்போது நிலவி வரும் போக்கு கட்சியை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×