search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ்
    X

    வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ்

    • அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ் செய்துள்ளனர்.
    • மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை ராமேசுவ–ரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கினார். நான்காவது நாளான நேற்று முன்தினம் சிவகங்கை நகர் முழுவதும் நடை பயணம் மேற்கொண் டார்.

    அப்போது வீரமாகாளி–யம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற பாதயாத்திரை–யின் போது அங்கு கட்டா–ணிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சாலையோ–ரம் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபுவின் டவுசர் பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பிளே–டால் கிழித்து அபேஸ் செய் துள்ள–னர்.

    இதுகுறித்து பிரபு சிவ–கங்கை நகர் காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புதுவிளக்கு பகு–தியைச் சேர்ந்தவர் முருகே–சன். இவரது மனைவி சுமதி. இவர் மதகுபட்டி பகுதியில் உள்ள கல்லூக்கால் கம்பி தயார் செய்யும் தனியார் கம்பெனி–யில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர் கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    இதுபற்றி மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி சப்-இன்ஸ்பெக் டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மனைவி லட்சுமி. இவர் கடந்த மூன்று மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனும–தித்தனர். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதா–பமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தவமணி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    Next Story
    ×