search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடனம்"

    • 3 சூப்பர் ஸ்டார்கள் ஒரேமேடையில் பங்கேற்று 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
    • தீபிகா படுகோன், ரன்வீர்சிங், ராணிமுகர்ஜி பங்கேற்பு

    தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.

    இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தநிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சைப் அலிகான், கரீனாகபூர், மாதுரி தீட்சித், வருண்தவான். அனன்யா பாண்டே, ஆதித்யாராய், ராணிமுகர்ஜி, தீபிகாபடுகோன், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர், ஆலியாபட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் 5 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் சமுதாய மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சருக்கு பழங்குடியி னர் மக்களின் பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர்.

    வடம் பிடிக்கப்பட்ட தேர், கோவிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழிநெடுகிலும் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.
    • ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி ஹெத்தையம்மன் திருவிழா கடந்த 27-ந் தேதி கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகர் இனமக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசிக்க கூடிய பகுதிகளில் 6 கிராமம், 8 கிராமம், 10 கிராமம் என கிராமங்களாக சேர்ந்து ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி குன்னூர் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் 8 கிராம மக்கள் இணைந்து திருவிழாவை விமரிசையாக கொண்டாடினர்.

    இதில் மல்லிக்கொறை, காரக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்ளிட்ட 8 கிராம படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருவிழாவையொட்டி காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.

    ஊர்வலத்தில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய வெண்ணிற ஆடை அணிந்து, பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து கொண்டு, நடனமாடிய படி ஹெத்தையம்மன் குடையுடன் செங்கொல் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    காரக்கொரையில் தொடங்கிய ஊர்வலமா னது, ஜெகதளா வந்து, மல்லிக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்பட 8 கிராமத்திற்கும் சென்று, மீண்டும் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலை அடைந்தது.

    இதனை தொடர்ந்து, படுகர் இன மக்கள் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்னர் கோவிலில் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமும் ஆடினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த திருவிழாவில் 8 கிராம படுகர் இன மக்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இருந்தும் படுகர் இன மக்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதுதவிர வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    • துர்காதேவி, சிவன் உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தல்
    • பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது

    அருவங்காடு,

    இந்தியாவில் நவராத்திரி விழா 9 நாட்கள் நடக்கும். அப்போது அம்மனின் 9 அவதாரங்களை நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதனைமுன்னிட்டு குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகள் கடவுள் வேடங்களான துர்காதேவி, சிவன், கர்நாடகாவின் கிராம கடவுள் காந்தாரா உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

    • 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.
    • பாரம்பரிய கலைகளை கற்பதால் மன அழுத்தம் குறைகிறது என மாணவ-மாணவிகள் கருத்து.

     கருமத்தம்பட்டி,

    தமிழரின் பாரம்பரியக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

    அழிந்துவரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழு கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளது.

    இதையொட்டி சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டு பாளையம் ஆதிவிநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர். நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் கனகராஜ் கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

    நாட்டு புறகலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருவாக்கி வருகிறோம் என்றார்.

    நடனமாடிய பெண்கள், மாணவ-மாணவிகள் கூறும் போது இது போன்ற பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் உள்ளது எனவும் அனைத்து தரப்பு மக்களும் இதனை கற்றுக் கொள்ள வேண்டும், இது எங்களுக்கு ஊக்கப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். 

    • அடுத்த மாதம் 8-ந் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பாலம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும்.
    • அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.

    தஞ்சாவூர்:

    தினமும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற மனமகிழ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியா கவும் கொண்டாடும் வகையில் ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தஞ்சாவூர் மாநகரில் முதல் முறையாக ஹேப்பி சன் ஸ்ட்ரீட் இன்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி, மானசா டான்ஸ் ஸ்டூடியோ நடத்திய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோட்டில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    மானசா டான்ஸ் ஸ்டூடியோ இயக்குனர் தனலட்சுமி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் இசைக்கருவிகள் இசைத்தும், கிரிக்கெட் விளையாடினார்.

    இதில் தஞ்சாவூர் மாநகரில் உள்ள மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வயது வரம்பு இல்லாமல் அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடி ,பாடி கொண்டாடினர்.

    இதில் பிரபல நடிகர்கள் போல் மிமிக்ரி செய்தல், சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுதல், பாடல்கள் பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்தது.

    அனைவருக்கும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்ப ட்டது.காலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது 9 மணி வரை நடைபெற்றது.

    இனி அடுத்த மாதம் 8-ம் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பா லம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும் என்று மேயர் சண். ராமநாதன் அறிவித்தார்.

    இன்று நடந்த முடிந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்று கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

    இந்த நிகழ்ச்சியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
    • சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும்.

    அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதி தைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.

    இதையடுத்து அன்று இரவு சரியாக 12.00 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

    திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப் பார்க்கலாம்.

    இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

    அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால்

    சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

    இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.

    வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

    • அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
    • நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    உத்தர கோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.

    அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

    ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.

    அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது.

    எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை.

    எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

    • ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.
    • கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள்.

    இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.

    ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு.

    முக்தி கிடைக்க வழி செய்யும்.

    • சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.
    • உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தர கோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார்.

    அந்த நான்கு தாண்டவங்கள் வருமாறு:

    (1) ஆனந்த தாண்டவம்

    (2) சந்தியத் தாண்டவம்

    (3) சம்விஹார தாண்டவம்

    (4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.

    அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று.

    அவை

    (1) திரிபுரந்தர தாண்டவம்

    (2) புஜங்கத் தாண்டவம்

    (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.

    • பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.
    • சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.

    அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.

    பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.

    அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.

    இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

    எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.

    ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

    சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும்.

    ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42 ஆகும்.

    ×