search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கைது"

    • பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது.
    • தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம் என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.
    • இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 45). கூலி தொழிலாளி. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (60). தொழிலாளி. இவருக்கும், மாதம்மாளுக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதம்மாளும், கூகலூரை சேர்ந்த அவருடைய 2-வது கணவர் செல்வன் (36) என்பவரும் பொலவக்காளி பாளையம் வந்தனர்.

    அப்போது மது போதையில் இருந்த தொழிலாளி செல்வனுக்கும், மாதம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.

    இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து செல்வன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த மாதம்மாள், செல்வன் ஆகிய 2 பேரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய செல்வனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அன்பழகன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கனகராஜின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அன்பழகனின் வீடும், கனகராஜின் அத்தை வீடும் அருகில் உள்ளன.

    நேற்று கனகராஜ் தனது அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இது பற்றி அறிந்த கனகராஜ், அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் அரிவாளுடன் சென்ற கனகராஜ் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அன்பழகனை வெட்டிக்கொலை செய்த கனகராஜை கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர்.
    • சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சூரம்பட்டி வலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார்.

    பின்னர் மது குடித்து விட்டு டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(35) கட்டிட தொழிலாளி தனது நண்பர்கள் இருவருடன் மது குடிக்க வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கிருஷ்ண குமாரை, கோபால கிருஷ்ணன் குடிபோதையில் இடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ண குமார் கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.

    இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • குப்புராஜ் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது
    • போலீசார் தங்க கட்டியை திருடி சென்ற நாகராஜை கைது செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குப்புராஜ் 15 பவுன் தங்க கட்டியை கள்ளாவில் வைத்து விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது நாகராஜ் தங்க கட்டியை திருடி தப்பிச் சென்றார். குப்புராஜ்திரும்பி வந்து பார்த்த போது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது. தொழிலாளியாக வேலை பார்த்து வந்த குமரேசனையும் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தங்க நகை பட்டறை உரிமையாளர் குப்புராஜ் பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டியை திருடி சென்ற நகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட 12 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆதியூரை சேர்ந்த செல்வ ராஜ் (42) என்பவர் மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    பிரதாப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த பிரதாப் வடக்கிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் செல்வராஜ், குடிபோதையில் இருந்த பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டனர். இதனால் கோபமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். காயம் அடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.
    • மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை அடுத்த சின்ன எலத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    தகராறு

    சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளியான மாதேஷ் (48) என்பவர் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜேஷ்குமார் குடியிருக்கும் பகுதியில் மாதேஷ் மீண்டு, மீண்டும் பலமுறை மோட்டார் சைக்கிளை சத்தத்துடன் ஓடி சென்றார்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் அவரிடம் சென்று ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.

    கத்தியால் வெட்டு

    இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். உடனே மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கைது

    இதுகுறித்து ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    • செல்வகுமார் ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலக்கதில் ஊராட்சி செயலாளர் சஜீத் பணியில் இருந்துள்ளார். அப்போது சேரம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான செல்வகுமார் (வயது 50) அங்கு சென்று, ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    • ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
    • கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சிறுமி அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமியை கலந்தபனையை சேர்ந்த உறவுக்கார வாலிபரான இசக்கிமுத்து (வயது 24) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இவர் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கட்டாயப்படுத்தி ஏற்றி உள்ளார்.

    பின்னர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த தகவல் அறிந்ததும் மாணிக்கம் தலைமறைவாகி விட்டார். அவரை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இதற்கிடையே மாணிக்கம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் புளியங்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார்.
    • இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அடுத்த சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர். அவர் சிவதாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பதும், வெள்ளி தொழிலாளியான இவர், குருவி சுடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சேலத்தாம்பட்டி ஏரியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அதே சமயம் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கான உரிமம் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    ×