search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதை தகராறில் எலக்ட்ரீசியனை கட்டையால் அடித்து கொன்ற சமையல் தொழிலாளி கைது
    X

    குடிபோதை தகராறில் எலக்ட்ரீசியனை கட்டையால் அடித்து கொன்ற சமையல் தொழிலாளி கைது

    • ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×