search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 15 பவுன் தங்க கட்டியை திருடிய தொழிலாளி
    X

    கோவையில் 15 பவுன் தங்க கட்டியை திருடிய தொழிலாளி

    • குப்புராஜ் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது
    • போலீசார் தங்க கட்டியை திருடி சென்ற நாகராஜை கைது செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குப்புராஜ் 15 பவுன் தங்க கட்டியை கள்ளாவில் வைத்து விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது நாகராஜ் தங்க கட்டியை திருடி தப்பிச் சென்றார். குப்புராஜ்திரும்பி வந்து பார்த்த போது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது. தொழிலாளியாக வேலை பார்த்து வந்த குமரேசனையும் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தங்க நகை பட்டறை உரிமையாளர் குப்புராஜ் பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டியை திருடி சென்ற நகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட 12 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×