search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளித்து பெண் தற்கொலை செய்த வழக்கில் தொழிலாளி கைது
    X

    கோப்புபடம். 

    தீக்குளித்து பெண் தற்கொலை செய்த வழக்கில் தொழிலாளி கைது

    • பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது.
    • தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம் என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×