என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த தொழிலாளி கைது
- சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சிறுமி அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமியை கலந்தபனையை சேர்ந்த உறவுக்கார வாலிபரான இசக்கிமுத்து (வயது 24) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இவர் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்