search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி வைத்திருந்த வெள்ளி தொழிலாளி கைது
    X

    துப்பாக்கி வைத்திருந்த வெள்ளி தொழிலாளி கைது

    • சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார்.
    • இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அடுத்த சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர். அவர் சிவதாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பதும், வெள்ளி தொழிலாளியான இவர், குருவி சுடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சேலத்தாம்பட்டி ஏரியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அதே சமயம் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கான உரிமம் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×