search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.
    • இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.

    பேரணி

    இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், தனியார் கல்லூரியை சேர்ந்த 1000- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை இருபுறமும் சுமந்து பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம் ,தேர் வீதி, கால்நடை சந்தை உள்ளிட்ட முக்கிய வீதியில் வழியாகச் சென்று மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை வந்தடைந்தது.

    மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர். பிரமாண்டமாக நடைபெற்ற 76-வது சுதந்திர தின கொடி அணிவகுப்பு பேரணியில் ஏராளமான பொதுமக்களும் உற்சாகமாக கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    இந்த பேரணிக்கு பாதுகாப்பாக காவல் துறையினரும் காவல்துறை வாகனங்கள் அவசர ஊர்திகள் பின் தொடர பேரணி முடிவடைந்தது. தேசியக்கொடியை நங்கவள்ளியை சேர்ந்த தறி தொழிலாளி செந்தில்குமார் வடிவமைத்தார்.பேரணியில் முன்னாள் முப்படை குடும்ப நல சங்கத்தின் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.
    • பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

    விழா மேடையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார். டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார் முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

    இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

    பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதலமைச் சர் சென்று தேசியக் கொடியையேற்றி வைத்து தேசியக் கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

    • தேசிய கொடியை இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
    • சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

    தருமபுரி, 

    பிரதமர் மோடி சுதந்திர தின விழாவை யொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய உள்ளோம். இதன் விலை ரூ.25 மட்டுமே. ஜி.எஸ்.டி கிடையாது.

    தேசிய கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியினை தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

    • அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின பவள விழாவையொட்டி தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    அதே போல இந்த ஆண்டு சுதந்திரதினவிழா 75- வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான கொண்டாட்டம் வருகிற 13-ந்தேதி தொடங்கி 15- ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த விழாவை கொண்டாட இப்போது இருந்தே பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் 4.50 லட்சம் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரதினத்தையொட்டி தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சாரதுறை சார்பில் அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்து 75- வது ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களிடம் தேச பக்தி மற்றும் தேசிய கொடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 நாட்கள் நடைபெறும் கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசிய கொடியுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கலாச்சார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • மருத்துவ முகாம் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை வேலூர் சரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து 9-வது தேசிய கைத்தறி தினவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியாத்தம் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

    நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், எம்.ஏகாம்பரம், நவீன்சங்கர், சி.என்.பாபு, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எம்.எஸ். அமர்நாத், மாவட்ட துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி ஆய்வாளர் ஷாநவாஸ் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முடிவில் கணபதி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    • கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர்.
    • உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த பேரிடர்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரும் கூட்டு முயற்சியின் ஆற்றலை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர்.

    வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.

    இந்த மழைக் காலம் மரம் வளர்ப்பதற்கும், நீர் பாதுகாப்புக்கும் சமமாக முக்கியமானது. மக்கள் முழு விழிப்புணர்வு, பொறுப்புடன் நீர் பாதுகாப்புக்கான புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களின் பங்கேற்பு, விழிப்புணர்வுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

    அமெரிக்கா, நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் பழமையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. இந்த கலைப்பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழமையானவை.

    இவை டெரகோட்டா, கல், உலோகம், மரம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. இதில் 11-ம் நூற்றாண்டின் அழகிய மணற்கல் சிற்பமும் ஒன்று. இது மத்திய பிரதேசத்தின் அப்சரா நடனத்தின் கலைப்படைப்பாகும். சோழர் காலத்தின் பல சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தேவி மற்றும் முருகன் சிலைகள் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்துடன் தொடர்புடையவை.

    4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செய்ய சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இதற்காக கொள்கைகளில் மாற்றம் செய்த அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாம் அனைவரும் விழாவை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சுதந்திர தின விழாவுக்கு மத்தியில் நாட்டில் மற்றொரு பெரிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. நமது துணிச்சலான தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பிரசாரம் தொடங்கப்படும்.

    வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் நாடு முழுவதும் 'என் மண் என் நாடு' என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இந்த ஆளுமைகளின் நினைவாக லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்த பிரசாரத்தின் போது அம்ரித கலச யாத்திரை நடத்தப்படும்.

    நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 7,500 கலசங்களில் மண் சுமந்து செல்லும் இந்த கலச யாத்திரை தலைநகர் டெல்லியை சென்றடையும். இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரக் கன்றுகளும் கொண்டு வரப்படும்.

    தேசிய போர் நினைவிடம் அருகே 7,500 கலசங்களில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை வைத்து 'அமிர்த வாடிகர்' கட்டப்படும். இது நாட்டின் மாபெரும் அடையாளமாக மாறும்.

    கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும். இதன் மூலம் நமது கடமைகளை உணர்வோம். நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த எண்ணற்ற தியாகங்களை உணர்வோம். சுதந்திரத்தின் மதிப்பை உணர்வோம்.

    இந்த முயற்சிகளில் ஒவ்வொரு மக்களும் இணைய வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அனைவரும் அங்கம் வகிப்போம்.

    சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் எப்போதும் நினைவு கூற வேண்டும். அவர்களின் கனவுகளை நனவாக்க இரவு-பகலாக உழைக்க வேண்டும். மக்களின் இந்த கடின உழைப்பையும், கூட்டு முயற்சியையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கான ஒரு இணைப்பு பாலமே இந்த மான் கி பாத் நிகழ்ச்சி ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
    • நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    கோவை:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

    மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

    நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

    கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

    இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.

    நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    • ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
    • ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

    இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.

    இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

    தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,

    என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.

    ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.

    5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.

    பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    • போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்
    • அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    அரியலூர்ஞ

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமண–சரஸ் வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உலக சமா–தானத்தை விரும்பும் பொருட்டு வெண் புறாக் களை பறக்க–விடப்பட்டன.

    அரியலூர்:

    பின்னர் கலெக்டர் பெ.–ரமண–சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகி–யோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பனியாற்றிய 162 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலை–வாணி, மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜய்சங்கர், பிற்பட்டோர் அலுவலர் குமார், ஆதி திராவிட நலஅலுவலர் விஜயபாஸ்கர், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் பழனி–சாமி, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்து–கிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணை–பதிவாளர் தீபாசங்கரி, இணைஇயக்குனர் ஜெயரா–மன், ஊரக வாழ்வா–தார திட்ட இயக்குனர் முரு–கண்ணன்,

    செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரி தேவேந்திரன், மணிவண்ணன், கலெக்ட–ரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரசு மருத்து–வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடை–யார்பாளையம் பரிமளம், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கி–யம் விக்டோரியா, ஜெயங் கொண்டம் துரை, ஆண்டிமடம் அலிபுரகு–மான்,

    அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தேன்மொழி, நகராட்சி கமிஷனர் தம–யந்தி, யூனியன் கமிஷ–னர் அரியலூர் ஸ்ரீதேவி, செந்துறை விஸ்வநாதன், தமிழரசன், திருமானூர் ஜெயராஜ், ராஜா, ஜெயங் கொண்டம் முருகா–னந்தம், அமிர்த–லிங்கம், ஆண்டி–மடம் ஜாகிர்உசேன், குரு–நாதன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் காம–ராஜ், ரவிசேகரன், டி.எஸ்.பி. ஆயுதப்படை மணவா–ளன், அரியலூர் சங்கர்கணேஷ், ஜெயங் கொண்டம் ராஜா சோமசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு பிரிவு சுேரஷ் குமார், சமூகநீதி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், கார்த்திகேயன் உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து–கொண்டனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பு கிராமசபை கூட்டம் நடை–பெற்றது.




    ×