search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி தலைவர்"

    • அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை.
    • தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு மகன் பாலாஜி (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக செயல்பட்டார். இவரது மனைவி உமாமகேஸ்வரி குஞ்சரம் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து குஞ்சரத்திற்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்து கொண்டிருந்தார். அப்போது தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வழியே சென்றவ ர்கள் இவரை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ள க்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவரின் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
    • சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    திருவட்டார் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் வைத்து ஜல் ஜீவன் மிஷன் 2023-2024-ம் ஆண்டுக்கான ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள். பயிற்சியாளர்கள் செல்வம், ராணி ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன், நீரின் முக்கியத்துவம், நீர் ஆதாரங்கள் மாசடைதல், கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரித்தல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள். கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பிடி.செல்லப்பன், பால்சன், இசையாஸ், தேவதாஸ், அனுசன் அய்யப்பன், லில்லிபாய் சாந்தப்பன், விமலா சுரேஷ், கெப்சிபாய் றூஸ், ரெஜினிவிஜிலா பாய், சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • அரசின் நலத்திட்டம் வழங்குவதற்கு எந்தவித முகாம்கள் அமைக்க வில்லை. சாலைவசதி இல்லாத மலைகிரா மங்களில் வசித்து வருகிறோம்.
    • இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார்கார்டு, டிஜிட்டல் ரேசன்கார்டு ஆகியவை வழங்கப்பட வில்லை மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பற்றி என்ன வென்றே தெரியாதநிலை யில் உள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நீதிபதிகார்த்திக் தலைமை யில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை கேட்டு நீதிபதி மற்றும் முகாம் அமைப்பா ளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் விவசாய கூலிவேலை மற்றும் கிடைக்கும் வேலை களை செய்து வருகின்றனர். கீழானவயலை அடுத்து அமைந்துள்ள மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி, மூங்கில்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் நடத்திய நீதிபதி மற்றும் வக்கீல்கள் குழுவினரிடம் தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தனர். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஒரு சதவீதம் கூட கிடைக்க வில்லை.

    ஓட்டு கேட்க ஊருக்கு வந்த தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களை எட்டிபார்க்க வில்லை. தற்போது இப்பகுதியின் ஊராட்சி தலைவர் யார், எம்.எல்.ஏ, எம்.பி யார் என்றுகூட எங்களுக்கு தெரியாது. ஓட்டு போடும் எந்திரமாக எங்களை நினைத்து அனை வரும் மறந்துவிட்டனர். அரசின் நலத்திட்டம் வழங்குவதற்கு எந்தவித முகாம்கள் அமைக்க வில்லை. சாலைவசதி இல்லாத மலைகிரா மங்க ளில் வசித்து வருகிறோம்.

    ஆரம்பகல்வி, சுகாதார நிலையம், மின்சாரவசதி, ரேசன்கடை ஆகியவைகூட எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார்கார்டு, டிஜிட்டல் ரேசன்கார்டு ஆகியவை வழங்கப்பட வில்லை. பிறப்பு-இறப்பு சான்றிதழ் பற்றி என்ன வென்றே தெரியாதநிலை யில் உள்ளனர்.

    பல கி.மீ தூரம் வனப்பகுதியில் நடந்து சென்று மருத்துவ சிகிச்சை செய்து வருகிறோம். இதில் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டனர். அரசு அதிகாரிகளை தங்கள் பகுதியில் பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. இந்த கிராமங்கள் அரசின் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகமே எங்களுக்கு உள்ளது. கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த கிராமங்களாக இருந்தாலும் இப்பகுதி உடுமலைப்பே ட்டைக்கு அருகில் உள்ளது. இதனால் பல சமயங்களில் எங்களது தாலுகா எது வென்றே தெரிவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைபேட்டை வழியாக இப்பகுதியை இணைக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை.

    மஞ்சம்பட்டி கிராமத்தில் மட்டும் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதேபோல 4 கிராமத்திலும் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சட்டவிழி ப்புணர்வு தேவையில்லை என்றும், அடிப்படை வசதிகள்தான் முதற்கட்ட தேவை என்பதும் ஏற்பட்டாளர்கள் தெரிந்து கொண்டனர். இதுகுறித்து நீதிபதி கார்த்திக் தெரிவிக்கையில்,

    கொடைக்கானல் மலைகிராமங்களான மூங்கில்பள்ளம், மஞ்சம்பட்டி, நாட்டாம்பட்டி கிராமங்களில் பலருக்கு ஆதார், ரேசன்அட்டைகள் கூட இல்லை. எனவே இங்கு வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ரேசன் பொருட்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொடுக்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி, ஆரம்பகல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    குடியுரிமையை உறுதி படுத்தும் வகையில் அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வனவிலங்குகளுக்கு நடுவே தங்கியுள்ள அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்காலத்தில் வாழ்ந்துவருவது போன்ற நிலையில் உள்ள அவர்களை நவீன உலகத்திற்கு அழைத்துவரவேண்டும் என்றார்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது.
    • தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சியில் வீரசேகரன் (வயது 32) என்பவர் ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், ஆதிரங்கம் ஊராட்சியில் 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அதில், ஆதிரங்கம் தர்கா எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வீரசேகரன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்தார். அதுமட்டுமின்றி, அந்த தொட்டிக்கு இந்திய தேசியக்கொடி போன்று வர்ணம் பூசியுள்ளார்.

    இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து, ஊராட்சி தலைவர் வீரசேகரன் கூறியதாவது:-

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. இது பழுதான நிலையில் இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு உருவாக்கவும் 75-வது சுதந்திர தினம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நினைவாக தேசியக்கொடியை போன்று வர்ணம் பூசப்பட்டது.

    இதன்மூலம், தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

    15-வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை சில கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து வழங்காமல் உள்ளனர். 60 நாட்களுக்குள் பணித்தேர்வு பட்டியலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பணித்தேர்வு பட்டியலை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு நிறைவேற்றவும், விடுபட்ட பணித்தேர்வு பட்டியலை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பணித்தேர்வு பட்டியலை விரைந்து கொடுக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட ரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி தலைவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு தேவை யான குடிநீர், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு பகுதிக்கு முழுமையான அளவு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்கிறது. ஆனால் கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வ தில்லை.

    பொதுமக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஒருங்கி ணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நிலவரப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதியில் எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது?, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்க ளுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலை வர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதுடன் அவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின் பகிர்மான கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் தொகை அடிப்படை யில் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கும் வகையில் செயல்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் இளங்கோ வன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திருப்புல்லாணி ஊராட்சி சேர்மன் புல்லாணி,பி.டி.ஓ.க்கள் கணேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அன்னலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
    • வேலை செய்பவர்களை துணைத்தலைவர் மிரட்டுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், தென்காசி யூனியனுக்கு உட்பட்ட பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அன்னலெட்சுமி, துணைத்தலைவராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் செயல்படாமல் இருந்ததால் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்து வந்தனர்.

    அந்த புகார் மனுவில், ஊராட்சியில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்றும், துணைத்தலைவர் ஊராட்சியில் வேலை பார்க்கும் அனைவரையும் வேலை செய்யவிடாமல் தடுப்பதுடன் , வேலை செய்பவர்களை மிரட்டி வருகிறார் எனவும் புகார் கூறியிருந்தனர்.

    இந்த புகார்கள் தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பாட்டாக்குறிச்சி ஊராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டார்.

    அதில் பாட்டாக்குறிச்சி ஊராட்சியின் தலைவர் அன்னலெட்சுமி, துணைத்தலைவர் முருகேசன் மற்றும் உறுப்பி னர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பதும், தலைவர் மற்றும் துணைத் தலைவர் தங்களது குடும்ப பிரச்சினை காரணமாக ஊராட்சியினை செயல்படாமல் வைத்துள்ள னர் என்பதும் உறுதியானது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தும் அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன்படி பாட்டாக்குறிச்சி தலைவர் அன்னலெட்சுமி மற்றும் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோரது காசோலைகள் மற்றும் பி.எப்.எம்.எஸ்.களில் கையொப்பமிடும் அதிகாரத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு வழங்குவதாக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    • தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது.
    • ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது சிவசக்தி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இப்பகுதியில் தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபுவுக்கு உடனடியாக சாலை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் தலைவர் பிரபு கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
    • ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

    இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.

    இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊருக்கு உழைக்கும் திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
    • கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி குருசந்திரசேகர் உள்ளார். இவர் ஊராட்சித் தலைவராக பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து பல சேவைகளை செய்து வருகிறார்.

    லட்சுமியும், அவரது கணவர் குரு சந்திரசேகரும் திண்டியூர் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் இல்லத் திருமண நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை குடும்பங்களுக்கு திருமண சீர்வரிசையாக தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, தலகாணி உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.

    மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக வேஷ்டி,சேலை, இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இது தவிர இப்பகுதியில் அரசு நிர்ணயித்த தொகையில் தரமான வகையில் சாலை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். இதற்கு தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிட கட்ட அரசு அனுமதி வழங்கி அதற்காக ரூ.18 லட்சம் மதிப்பீடு செய்து வழங்கியது.

    இருந்த போதிலும் இந்த கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஊராட்சித் தலைவர் தனது சொந்த பணத்தில் ரூ.13 லட்சம் செலவு செய்து ஆக மொத்தம் 31 லட்சத்தில் ஊராட்சி அலுவலகத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டிடத்தை நாளை 6-ந் தேதி மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி திறந்து வைக்கிறார்.

    இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், சுந்தரசாமி, கிழக்கு யூனியன் அலுவலர்கள் மற்றும் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் நேற்று முன்தினம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்முத்தையா பாண்டியன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் கிளைசெயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
    • எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×