என் மலர்
நீங்கள் தேடியது "பணித்தேர்வு பட்டியல்"
- முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
- இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட நீதிபதி நியமனம்.
காவலர்கள் பணிக்கு தேர்வானவர்கள் குறித்த இறுதிப்பட்டியலை 30 நாளில் வெளியிட தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
121 எஸ்ஐ பணியிடம், 129 தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கு தேர்வானர்கள் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்பட்டு 2024 ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
காவலர்கள் பணித்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவிலலை என புகார் எழுந்தால் திருத்தி முறையாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் 2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஜம்மு ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை; மீண்டும் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆணையம் முறையிட்டது.
இந்நிலையில், தமிழில் தேர்வெழுதியோருக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றியுள்ளதால் நீதிபதி தயாரித்த பட்டியலை வெளியட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார்கள்.
15-வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை சில கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து வழங்காமல் உள்ளனர். 60 நாட்களுக்குள் பணித்தேர்வு பட்டியலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பணித்தேர்வு பட்டியலை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு நிறைவேற்றவும், விடுபட்ட பணித்தேர்வு பட்டியலை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பணித்தேர்வு பட்டியலை விரைந்து கொடுக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தினார்.






