search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு தற்கொலை"

    • அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஜரத்தல் அடுத்த மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (55). கருத்து வேறுபாடு கார ணமாக மனைவியை பிரிந்து மகன் தினேஷ்குமா ருடன் (24) வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரது அறையில் தூங்க சென்றார். கணேசன் அருகில் உள்ள தாய் வீட்டில் தூங்க சென்றார்.

    பின்னர் காலை எழுந்த கணேசன் தனது வீட்டிற்கு வந்தார். வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் அக்கம் பக்கத்தி னர் உதவியு டன் கடப்பாறை யால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (77). இவர் தனது மகள் புஷ்பலதா வீட்டில் வசித்து வந்தார். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி இருந்து உள்ளது.

    வயிற்று வலிக்காக ராமகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி அதிகமாக இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவர் குடித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் உள்ள அறையில் ராமகிருஷ்ணன் தூங்க சென்றார். அவரது மகள் புஷ்பலதா மற்றொரு அறையில் தூங்கி கொண்டி ருந்தார்.

    அதி காலை 4 மணி அளவில் தந்தை படுத்து தூங்கிய அறையில் லைட் எரிந்ததால் என்னவென்று பார்க்க புஷ்பலதா அவரது அறைக்கு சென்றார்.

    அப்போது ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த துடுப்பதி, கருமாண்டி செல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்ப ழக்கம் காரணமாக மூர்த்தி க்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்து விட போவதாக மூர்த்தி கூறிவந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். 

    • வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.
    • தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ரெட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சரவணன் . இவரது மனைவி கோகி லவாணி. இவர்களுக்கு விஷ்ணு பிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

    சரவணன் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வந்தார். அருள்சா ரதி வெளி நாட்டில் ஐ.டி. கம்பெனி யில் வேலை க்கு செல்ல வேண்டி கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனி யார் பயிற்சி மையத்தில் பயி ற்சி பெற்று வந்தார்.

    இந்நிலை யில் கடந்த 21-ந் தேதி அருள்சாரதி பயிற்சி முடித்து விட்டு செ ன்னையில் இருந்து வீட்டி ற்கு வந்தார். கடந்த 2 நாட்களாக வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அருள்சாரதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருள்சாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.
    • திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம சர்க்கரை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமண மாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் 2½ வயதில் நவின் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் பவித்ரா வீட்டில் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

    சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று விட்டனர். வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்து பவித்ராவை கூப்பி ட்டு உள்ளார். எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார்.

    இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.

    உடனே உறவினர்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட பவித்ராவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    • மகிலன் திடீரென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • விஜயா வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி அருகே புதுகோட்ட சரடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் மகிலன். இவர் சின்னகவுண்டஅள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

    மகிலனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாயதேவி என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகிலனும், மாயதேவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மகிலன் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயா உறவினர் வீட்டிற்கு சென்றதால் மகிலன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் திடீரென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று காலையில் விஜயா வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் அரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு, சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகிலனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). கடந்த 5 வருடமாக பெருந்து றை மடத்துப்பா ளை யம் பிரிவு அருகே அமைந்துள்ள மோட்டார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் வேலைக்கு வரும் பொழுது மது அருந்தி வந்துள்ளார். மேலும் ராம சாமி வயிற்று வலி காரண மாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று காலை ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் அருகே உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு ந்து ள்ளார்.

    உடன் பணி புரிந்தவ ர்கள் இதைக்க ண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு அ வரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்க னவே ராம சாமி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்ப வம் தொட ர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    • பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகர் ஆண்டவர் வீதியை சேர்ந்த வர் பரந்தாமன் (41). தொழிலாளி. இவரது மனைவி தன்யா. பர ந்தாமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதிகமாக குடிப்பதால் பரந்தாமனுக்கு வயிறு வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு பரந்தாமன் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ள்ளார். பின்னர் பரந்தா மன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    தன்யா சமையலறையில் படுத்து தூங்கினார். பின்னர் காலை தன்யா வீட்டுக்குள் வந்து கதவை திறந்த போது பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தார். உடனடியாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பரந்தாமன் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மன்னதபாளையம், குருசாமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (28). இவரது மனைவி அகல்யா. கார்த்தி ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக கார்த்திக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது.

    மதியம் 12 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் ஈரோடு கொல்லம்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் பிரதாப் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதாப் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் துரைசாமி (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார்.

    துரைசாமி மற்றும் பழனி யம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் துரை சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதி ப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததா கவும் ஆனால் வயிற்று வலி குணமா கவில்லை என கூறப்படுகிறது.

    வயிற்று வலி வரும்போ தெல்லாம் துரைசாமி செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் 3 பேரும் சாப்பிட்டனர் .பின்னர் பழனியம்மாள் அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்க சென்றார்.

    இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது.

    உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் . அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்த னர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பூவதி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் மணி (வயது18) கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மன வேதனையில் இருந்த மணி குருந்தொட்டாவூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.
    • அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (54). இவரது இளைய மகள் கவுரி (30). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் அனுமன் பள்ளியில் உள்ள தனியார் சித்த மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில வருடங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று காலை தாய் தனலட்சுமி வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கவுரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×