வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ரெட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சரவணன் . இவரது மனைவி கோகி லவாணி. இவர்களுக்கு விஷ்ணு பிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

சரவணன் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வந்தார். அருள்சா ரதி வெளி நாட்டில் ஐ.டி. கம்பெனி யில் வேலை க்கு செல்ல வேண்டி கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனி யார் பயிற்சி மையத்தில் பயி ற்சி பெற்று வந்தார்.

இந்நிலை யில் கடந்த 21-ந் தேதி அருள்சாரதி பயிற்சி முடித்து விட்டு செ ன்னையில் இருந்து வீட்டி ற்கு வந்தார். கடந்த 2 நாட்களாக வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்த ன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அருள்சாரதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருள்சாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com