search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு தற்கொலை"

    • படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சேர்ந்தவர் மனோகரன் (59). இவரது மனைவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூ ரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் சவுபர்ணிகா (18) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுபர்ணிகாவுக்கு பொறியியல் படிக்க சிரமமாக இருப்பதாகவும், அதனால் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பு வதாகவும் கூறியுள்ளார்.

    அதற்கு தந்தை மனோகரனும் சம்மதித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் விடுமுறை முடிந்து கல்லூரி செல்வதற்காக பை வாங்கி வருவதற்காக மனோகரன் காலையில் ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    ஈரோடு சென்ற மனோகரன் மீ ண்டும் மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்துள்ளது. மகளை சத்தமிட்டு கூப்பிட்டும் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை.

    இதையத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே யே சவுபர்ணிகா இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை
    • உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை

    நாகர்கோவில் : அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அனிதா (45). இவர்களது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16). சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டும், சகாய பூஜா மவுலிகா 11-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகியோர் தூக்கில் தொங்கினார்கள்.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அனிதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை முடிவு எடுத்துக்கொள்வதாகவும் எனது மகள்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அனாதையாகி விடுவார்கள். எனவே அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்வதாக கூறியிருந்தார்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 பேர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அனிதா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

    பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் தாம் இறந்து விடுவோம் என்று அச்சத்தில் இருந்து உள்ளார். இது குறித்து தனது மகள்களிடம் அனிதா தெரிவித்துள்ளார். தான் இறந்துவிட்டால் உங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகளும் தாய் இறந்த பிறகு நம்மால் எப்படி வாழ முடியும் என்று நினைத்து அவர்களும் தாயின் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து தான் 3 பேரும் ஒரே கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர். 

    • மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தண்ணீர்பந்தல்பாளையம் பூலேரிகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (29). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு ராசிகா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மாரியப்பன் குடும்ப செலவுக்காக அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.

    இதற்கிடையில் மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன் மாரியப்பன் அவரது குடும்பத்துடன் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்த்தி வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • சித்தோடு போலீசார் தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பாரதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மூத்த மகள் ஆர்த்தி (14). இவர் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆர்த்தி டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்து சென்னை யில் இருந்து ஊர் திரும்பிய தனது தாயுடன் இரவு சுமார் 9.45 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    பின்னர் ஆர்த்தி வீட்டில் பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் இருந்த நிலையில் சமையல் அறையில் ஓட்டு மர சட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவி ஆர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் கெரேகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். இவரது மனைவி செவந்தி (வயது24). இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியில் அபிஷேக் வேலை செய்து வருவதால் கணவனும்-மனைவியும் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக் தனது மனைவி செவந்தியிடம் சமையல் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் சூளகிரியை அடுத்த ஜீபாளையத்தில் உள்ள தனது பெற்றோருக்கு சென்றுவிட்டார்.

    இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் அட்கோ போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து செவந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில் செவந்தி தற்கொலை கொண்டதால் ஓசூர் எஸ்.பி. கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் ஹரீஷ் (வயது31). இவர் மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனை முத்தப்பா தட்டிகேட்டதால், தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஹரீஷின் பெற்றோர் கோபித்து கொண்டு தனது மகள் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதன்காரணமாக மனமுடைந்த காணப்பட்ட ஹரீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். கொளத்துப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார்.

    இவரது மகள் அமிர்தவர்ஷினி (23). இவர் ஐ.எம்.எஸ்.சி படித்து விட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அமிர்த்வர்ஷி னி யு.பி.எஸ்.சி. அமலாக்க தேர்வு எழுதி வந்தார்.

    தேர்வு கடினமாக இருந்ததாக அமிர்தவர்ஷினி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில் மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதவை உடைத்து அமிர்தவர்ஷினியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு அமிர்தவர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர்.
    • குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    பஞ்சாப் மாநிலம், சூலோவால் பகுதியை சேர்ந்தவர் குருப்ரீட்சிங் (வயது35). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லாரியில் தலைகவசம் லோடு ஏற்றி ஓசூருக்கு வந்தார். அங்கு அந்த நிறுவனத்தில் லாரியை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.

    இதனிடையே குருப்ரீட்சிங்க்கும், அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனால் அவரது மனைவி விவாகரத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருப்ரீட்சிங் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள ஆட்டுகாரம்பட்டி வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சந்தியா (வயது20), பிரியா என்கிற 2 மகள்கள் உள்ளனர். சந்தியா தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவை, அவரது தாய் மாமாவான பி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இதையடுத்து நேற்று சந்தியா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.
    • மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது45). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்திரம்மா (45). இந்த நிலையில் கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் அறையில் அய்யப்பன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). அவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டி ருந்தார். அவரது மனைவி தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அய்யப்ப னுக்கு குடிப்பழ க்கம் இருந்துள்ளது. குடிப்ப ழக்கத்திற்கு அடிமையாகி சரிவர சாப்பிடாமல், சரியாக வேலைக்கு செல்லா மல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு ள்ளார். மேலும் தனக்கு தானே கை, கால்களை அறுத்து ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு ள்ளார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று இரவு தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், பேசாமல் செத்து விடலாம் என்றும் அய்யப்பன் கூறியுள்ளார். அப்போது அவருக்கு மனைவி மகன்கள் ஆறுதல் கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்று விட்டனர்.

    நேற்று அதிகாலை வேலைக்கு செல்ல வேண்டி சித்ரா எழுந்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் அய்யப்பன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் ஆம்புலன்ஸ் மூலம் அய்யப்பனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யப்பனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • அறையில் கணவர் தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு 46 புதூர் வேல பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கில்பர்ட் (30). இவரது மனைவி ஆரோக்கியரோசாலி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஜான் கில்பர்ட் லக்காபு ரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அவரது மனைவி கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்ஸ் கம்பெனி க்கு விடுமுறை என்பதால் வாங்கிய சம்பளத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஜான் கில்பர்ட் வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வெளியே போகச் சொல்லி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

    சிறிது நேரம் பார்த்து விட்டு அவரது மணி வீட்டின் கதவை தட்டி யுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சை க்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழி யிலேயே ஜான் கில்பர்ட் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் கில்பர்ட் உடலைப் பார்த்து அவரது மனைவி- குழந்தை கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • பெரியாம்பட்டியில் மாட்டு கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, மே.29-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள செங்கோடசின்னஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி அனிதா.

    இந்தநிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி அன்று அனிதா இறந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமு நேற்று தனது மாமனார் வீடான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியாம்பட்டியில் மாட்டு கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×