என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் கெரேகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். இவரது மனைவி செவந்தி (வயது24). இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியில் அபிஷேக் வேலை செய்து வருவதால் கணவனும்-மனைவியும் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக் தனது மனைவி செவந்தியிடம் சமையல் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் சூளகிரியை அடுத்த ஜீபாளையத்தில் உள்ள தனது பெற்றோருக்கு சென்றுவிட்டார்.
இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் அட்கோ போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து செவந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில் செவந்தி தற்கொலை கொண்டதால் ஓசூர் எஸ்.பி. கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் ஹரீஷ் (வயது31). இவர் மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனை முத்தப்பா தட்டிகேட்டதால், தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஹரீஷின் பெற்றோர் கோபித்து கொண்டு தனது மகள் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதன்காரணமாக மனமுடைந்த காணப்பட்ட ஹரீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்