search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

    • பெரியாம்பட்டியில் மாட்டு கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, மே.29-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள செங்கோடசின்னஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி அனிதா.

    இந்தநிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி அன்று அனிதா இறந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமு நேற்று தனது மாமனார் வீடான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியாம்பட்டியில் மாட்டு கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×