search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குபோட்டு தற்கொலை"

    • பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
    • உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
    • சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி யை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் குள்ளங்காட்டில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி தனபாக்கியம் (29). கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜீவாவின் அண்ணனும், அதைத்தொடர்ந்து அவரது பாட்டியும் இறந்துவிட்டனர்.

    இதனால் கடுமையான மன அழுத்தத்துக்குள்ளான ஜீவா தொடர்ச்சியாக மது அருந்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜீவா தொடர்ந்து, மது அருந்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாலை தனபாக்கியம் அருகில் வசித்து வரும் தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அதிக மது போதையில் ஜீவா அங்கு வந்துள்ளார்.

    அப்போது மது அருந்து வது குறித்து தனபாக்கியம், கணவர் ஜீவாவை கண்டித்து ள்ளார். இதையடுத்து இருவரும் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் அதிகாலை தனபாக்கியத்தின் தாயார் கண் விழித்துப் பார்த்தபோது ஜீவா அங்கு இல்லை.

    இதையடுத்து அருகில் உள்ள தங்களது வீட்டுக்கு தனபாக்கியமும், அவரது தாயாரும் சென்று பார்த்து ள்ளனர். அப்போது வீட்டின் அறையில் பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக உறவினர்களின் உதவியுடன் ஜீவாவை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஜீவா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.

    இது குறி த்து சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப் பட்டவரான இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனை கண்ட உறவி–னர்கள் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற னர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாததால் வெளியில் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஆனால் கடன் தொகை யை திருப்பி செலுத்தாததால் கடன்காரர்கள் வீடு தேடிவந்து கேட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இவரது மனைவி சரண்யா கடந்த ஒரு மாதகாலமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வ ப்போது வந்து கணவரை பார்த்து சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பிரிண்டிங் பட்டறை யில் தனியாக இரு ந்த கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    இது குறித்து சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பென்னாகரம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் விபரீத முடிவு

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மிட்ட தாரர் தெருவைச் சேர்ந்தவர் நசீர்பாஷா. இவரது 2-வது மனைவி ஷம்சாத் (வயது48). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசீர்பாஷா இறந்து விட்டார். இந்த நிலையில் ஷம்சாத் தனது மகன் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்தார். ஷம்சாத்துக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதியடைந்தார். இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு 11மணியளவில் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷம்சாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நசீர்பாஷா–வின் மகன் மஹப்பூஷா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல், வித்யா நகரை சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலை கள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார்.

    திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    இதையடுத்து காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்த போது பேன் மாட்டும் கொக்கியில் திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழி யிலேயே திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபட்டுள்ளார். இதே போல் நேற்றும் மது போதை யில் வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியையும், குழந்தை யையும் அடித்து வீட்டை வி ட்டு வெளியே துரத்தி விட்டு உள்ளே சென்று கதவை தாழ்யிட்டுகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த நித்தியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறை யில் சுரேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் எம்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் தாமரை க்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தாமரை கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த 3 மாதமாகியும் ஆராத நிலையில் மிகுந்த மன வேதனைகள் இருந்து வந்துள்ளார்.

    சிகிச்சை எடுத்தும் குணமா கவில்லை. சம்பவத்தொன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் தளவாபாளை யத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    தற்கொலை

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காரணம் என்ன?

    சத்ய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.இது குறித்து

    பரமத்தி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்ய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 5 வருடத்திலேயே சத்யபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார்.
    • அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அண்ணா துரைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட தால் குடித்து விட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று ராஜேஸ்வரி கண்டி த்து உள்ளார்.

    இதனால் அண்ணாதுரை கோபித்து கொண்டு சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அவ்வபோது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார். அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    அக்கம் பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அண்ணாதுரை இறந்து விட்டதாக தொிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.

    பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.

    அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.

    இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செ ல்வி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மா தங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பண த்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சிவா மதுவுக்கு அடிமையாகி தொழிலையும் சரி வர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை தங்களது உறவினர் ஒருவரை பார்க்க தமிழ் செல்வி வெளியே சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவி ட்டார்.

    தொடர்ந்து சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோ து வீட்டின் உள் அறையில் சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியு டன் மீட்டு அந்தியூர் அரசு மரு த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×