என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flower shop worker"
- பிரசாத் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
நம்பியூர்:
நம்பியூர் பேரூராட்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). இவர் நம்பியூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவியும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வெளியே வந்த பிரசாத் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் வெள்ளை வேட்டியால் தனக்குத்தானே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் காலை அக்கம் பக்கத்தினர் ஓலை குடிசை கொட்டகையை பார்த்தபோது அங்கு பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவி நதியா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
- நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்.
- முன்விரோதம் காரணமாக கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சங்குமணி (28) என்பவரும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பத்மநாதனை வெட்டியது தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் பத்மநாதன். இவர் டவுனில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு பத்மநாதன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 3 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
படுகாயம் அடைந்த பத்மநாதனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முன்விரோதம் காரணமாக கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சங்குமணி (28) என்பவரும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பத்மநாதனை வெட்டியது தெரிய வந்தது.
அதன் பேரில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்