search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North State teenager"

    • பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
    • உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • நரேஷ் சிங் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது.

    கோவை,

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார். அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் நாகேந்திரகுமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
    • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள செளரா பகுதியைச் சேர்ந்த வர் நாகேந்திர குமார்(21). இவரது மனைவி பூஜா. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் புரா கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    நாகேந்திர குமார் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று நாகேந்திர குமார் மனைவி பூஜாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் இடையே போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாகேந்திர குமார் உடன் வேலை பார்க்கும் கோவிந்தன் என்பவர் நாகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் நாகேந்திர குமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் பார்டர்க் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் மாலிக் (25). இவர் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத் தன்று ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    அவரது நண்பர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஞ்சன் மாலிக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஏற்கனவே ரஞ்சன் மாலிக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரஞ்சன் மாலிக் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை.

    திருமணம் ஆகாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×