search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    வட மாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
    • உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    Next Story
    ×