search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனியன் கம்பெனி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    பனியன் கம்பெனி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • பழனிச்சாமி படுக்கை அறையில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    கொடிவேரியை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (39). இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும் ஸ்ரீசைலா என்ற மகளும் உள்ளனர் .

    இந்நிலையில் பழனிச்சாமியும் அவரது மனைவியும் கோபியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

    பழனிச்சாமி தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது, கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டத்தில் இருந்து உள்ளார் . சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பழனிச்சாமி ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தனது மகளை பள்ளியில் இருந்து கூட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கீதா வீட்டில் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது பழனிச்சாமி படுக்கை அறையில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

    தனது கணவர் பழனிச்சாமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த கீதா சத்தம் போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பழனிச்சாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×