search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து தற்கொலை"

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜோபு (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மனம் உடைந்த ஜோபு, வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனு மதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இதனால் ஏழுமலை தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகயாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். பின்னர் ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • காப்பாற்ற முயன்ற மகளும் கருகினார்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் பரிதாபம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப் வீரர் ஏழுமலை.ஆவடியில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி வனஜா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஏழுமலை 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.வீட்டில் தனது மூத்த மகளான சண்முகப்பிரியா மட்டும் இருந்த நிலையில், ஏழுமலை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென மதுபோதையில், ஏழுமலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனைக் கண்ட அவரது மகள் சண்முகப்பிரியா உடனடியாக தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது இருவரும் தீயில் சிக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயில் எரிந்து கொண்டிருந்த தந்தை ஏழுமலை மற்றும் மகள் சண்முகப்பிரியாவை மீட்டனர்.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஏழுமலை உடல் முழுவதும் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகப்பிரியா தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கனகதாரணி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் கனகதாரணியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் உடல் கருகி இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்தும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட கனகதாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
    • மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கரோலின் மலர் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 2-வது மகள் பி.டி.எஸ். படித்து வருகிறார். சுமார் 6 மாத காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன் பகுதியில் இருந்து பெட்ரோல் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவியும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கரோலின் மலர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 26). பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தன்னுடன் வேலை பார்த்த மைசூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் திருமூர்த்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை காப்பாற்றி விட்டனர். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் அவரை காப்பாற்றிவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தனது சகோதரிக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மணியக்காரன்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார். அருகே அவரது இருசக்கர வாகனம் இருந்தது.

    இதுகுறித்து பாலக்கோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருமூர்த்தி தானே உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அவர் 3-வது முயற்சியில் உயிரிழந்தார்.

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை
    • கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமாக அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர்

    கொழிஞ்சாம்பாறை,

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே உள்ள திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது46). இவரது மனைவி சாந்தினி(43). இவர்களுக்கு கார்த்திக்(14), ராகுல்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் மர வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர வேறு பணிகளையும் எடுத்து ெசய்து வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்றனர். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது, வீட்டிற்குள் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி, மகன்கள் என 4 பேரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அவர்க ள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தாலா ஆஸ்பத்திரியில் அனுமதித்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து திருத்தாலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

    விசாரணையில், ராதாகிருஷ்ணன் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமா க அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர் . இதனால் ராதாகிருஷ்ணன் மனவேதனையில் இருந்ததும், அதன் காரணமாகவே மண்எ ண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை சூலூர் செஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா (40). இவர்கள் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ராஜா வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராதா கோபித்து கொண்டு அவரது ககோதரி வீட்டுக்கு சென்றார்.

    இதனை நினைத்து மனவேதனை அடைந்த ராஜா விரக்தி அடைந்து வீட்டில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவேன உடல் முழுவதும் பரவியது.

    ராஜா வலியால் அவர் அலறி துடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து ராஜாவை மீட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் விசாரணை தீவிரம்
    • சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் ஊற்றி அவர் கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் வாலிபர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபர் தற்கொலை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாணவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகில் உள்ள மாணிக்கசாமி கோவில் சந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மணிராஜ் (வயது22). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வந்தார். நீட் தேர்வுக்காவும் படித்து வந்தார்.

    ஆனால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து தனது மகனை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு தந்தை அறிவுறுத்தி வந்தார்.

    இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கலை அறிவியியல் கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தனது நண்பர்களிடம் புலம்பி வந்த நிலையில் சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த மணிராஜ் பரிதாபமாக உயரிழந்தார்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் மனைவியுடன் கணவருக்கு தொடர்பில் இருந்ததால் 2-வது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சஞ்சிலாமணி(38). முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கடந்த 10 வருடத்துக்கு முன்பு சஞ்சிலாமணியை 2-ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவரது முதல் மனைவியிடம் மீண்டும் தொடர்பில் இருப்பது சஞ்சலாமணிக்கு தெரியவந்தது. எனவே இவர் தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதால் விரக்தி அடைந்த சஞ்சலாமணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவையில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

    இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

    ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×