search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தொல்லையால் விபரீதம்
    X

    கடன் தொல்லையால் விபரீதம்

    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை
    • கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமாக அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர்

    கொழிஞ்சாம்பாறை,

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே உள்ள திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது46). இவரது மனைவி சாந்தினி(43). இவர்களுக்கு கார்த்திக்(14), ராகுல்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் மர வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர வேறு பணிகளையும் எடுத்து ெசய்து வந்துள்ளார்.இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்றனர். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது, வீட்டிற்குள் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி, மகன்கள் என 4 பேரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அவர்க ள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தாலா ஆஸ்பத்திரியில் அனுமதித்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து திருத்தாலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

    விசாரணையில், ராதாகிருஷ்ணன் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமா க அவருக்கு கடும் நெருக்கடி கொடு த்துள்ளனர் . இதனால் ராதாகிருஷ்ணன் மனவேதனையில் இருந்ததும், அதன் காரணமாகவே மண்எ ண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×