search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து தற்கொலை"

    • சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி கிழக்கு வீதியை சேர்ந்தவர் மலையாளம். இவருடைய மகன் சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மனம் நொந்து பேசுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது வீட்டின் வெளியே இருந்த அவருடைய தம்பி பிரகாஷ், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூட்டிய வீட்டுக்குள் தாய் மகன் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியே சேர்ந்தவர் ராஜம் (வயது 85).

    இவரது மகன் அன்பழகன் (67). கூலித்தொழிலாளியான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    உடல் நிலை சரியில்லாத தாய் ராஜத்துடன் அன்பழகன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர். அப்போது அன்பழகன் வீட்டில் இருந்து திடீரென்று புகையுடன் கூடிய தீயில் கருகிய துர்நாற்றம் வீசியது.

    இதனால் அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனே நாகரசம்–பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தீயில் உடல் கருகிய நிலையில் தாய் ராஜமும், அவரது மகன் அன்பழகனும் பிணமாக கிடந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நாகரசம் பட்டி போலீசார் விசாரித்தனர்.

    இதில் உடல் நிலை சரியல்லாமல் கிடக்கும் தாயையும், தன்னையும் சரிவர கவனிக்க ஆட்கள் இல்லாததால், மன வேதனையில் அன்பழகன் தனது உடலிலும், தனது தாயின் உடலிலும் மண்எ ண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
    • இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி காமாட்சி (25). கூலித் தொழிலாளர்கள்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

    தீக்குளிப்பு

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார் . உடலில் தீப்பற்றி எரியவே வலி தாங்க முடியாமல் காமாட்சி சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பரிதாபமாக இறந்தார்

    இந்த நிலையில் காமாட்சி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காமாட்சிக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆவதால் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகன்யா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை காஞ்சிக்கோயில் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால் (71). திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சி வராமன் (74). தங்கை குமுதா (68). தனது அண்ணன் சிவ ராமன் குடும்பத்துடன் வசி த்து வந்த ஜெயபால், அவரு டன் சேர்ந்து தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

    திருமணமாகாத விரக்தி யில் இருந்து வந்த ஜெயபால் தினமும் மது அருந்தி வந்து ள்ளார். அதுகுறித்து தங்கை குமுதா ஏதாவது கேட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல கடையை திறக்க சென்றவர் திடீரென மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாகடர் வரும் வழியிலேயே ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடலில் தீ எரிந்த படி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள பி.ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்தவர் கைலாசநாதன். இவருடைய மகள் கீர்த்தனா (30). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கீர்த்தனா கடந்த 10 ஆண்டுகளாக தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் இதற்கான சிகிச்சை அளித்தும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கைலாசநாதனும் அவரது மகன் சேதுராமனும் படுக்கையறையில் தூங்கியுள்ளனர்.

    கீர்த்தனா ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    உடனடியாக கைலா சநாதனும், அவரது மகன் சேதுராமனும் எழுந்து சென்று பார்த்த போது அங்கு உடலில் தீ எரிந்தபடி கீர்த்தனா அலறி துடித்துள்ளார்.

    இதுகுறித்து கீர்த்தனாவிடம் கைலாசநாதன் கேட்டபோது, எறும்பு மருந்தை தின்றுவிட்டு பின்னர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறியுள்ளார்.

    பின்னர் உடனடியாக கீர்த்தனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவருடன் அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த மேல்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சனி கடந்த 27-ந்தேதி தனக்குத்தானே மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் மேல்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
    • உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மாவு மில் நடத்தி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக பால்ராஜ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் பால்ராஜ், சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    நேற்று இரவு வீட்டில் எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பால்ராஜ், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார். அதனை கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர்.

    தீயில் உடல் கருகிய பால்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மில் உரிமையாளர் தீ குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
    • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

    இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது.
    • சம்பவத்தன்றும் சுரேஷ்குமா ருக்கு வலி ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி.

    சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடமாக சிறுநீரக கல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி வலி தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் சுரேஷ்குமாருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மண்எண்ணை எடுத்து தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கமணி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து அவர் மீது தண்ணிரை ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வ ஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 26), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடு மையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்எண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய் தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    கோவை,

    கோவை பேரூரை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது43). கூலி தொழிலாளி. இவரது மனைவி சர்மதி (40).

    இந்த நிலையில் பாலசந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அங்கு மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டார். இதனால் சர்மதி கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றினார்.

    பின்னர் மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்று மனைவி சர்மதியை உடனே தன்னுடன் வீட்டுக்கு வருமாறு கூறினார். அதற்கு அவர் செல்ல மறுத்து பின்னர் வருவதாக கூறினார். இதனால் கோபம் அடைந்த பாலசந்திரன் உடலில் தீ வைத்து கொண்டார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சர்மதி அக்கம் பக்கத்தினர் உடவியுடன் தீயை அணைத்து பாலசந்திரனை மீட்டார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×