search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immolation"

    போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் வாலிபர் தாக்கி ஆபாசமாக திட்டியதால் மனவேதனையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி ஏ.ரெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வித்யாஸ்ரீ (வயது 21) என்ற மகள் உள்ளார். வித்யாஸ்ரீ தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார்.

    மாதையன் பக்கத்து வீட்டில் வசிபவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு நந்தன் என்கிற நிர்மல் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை மதிகோண்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அவர் மதிகோண்பாளையத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாதையனும், ராஜேந்திரனும் அருகருகே வசித்து வருவதால் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். மாதையன் ஓசூருக்கு வேலைக்கு சென்றுவிடுவதால் அவரது வீட்டில் மனைவி லதா, மகள் வித்யாஸ்ரீ, அவரது பாட்டி உள்பட 3 பெண்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் ராஜேந்திரன் மகன் நந்தன் அடிக்கடி தங்களது நண்பர்களுடன் சென்று எங்களிடமே தகராறில் ஈடுபடுகிறார்களா? என்று கூறி மிரட்டி வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    நேற்று மீண்டும் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நந்தன் மீண்டும் வீடு புகுந்து லதாவையும், வித்யாஸ்ரீயையும் மிரட்டினார். இதனால் பயந்துபோன லதா, அவரது மகள் வித்யாஸ்ரீ ஆகியோர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் இரு தரப்பினரையம் அழைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

    போலீசில் புகார் தெரிவித்தால் ஆத்திரத்தில் நந்தன் நேற்று மீண்டும் லதா வீட்டிற்குள் சென்று எங்கள் மீது நீ போலீசில் புகாரா கொடுக்கிறாய்? என்று கூறி லதாவையும், வித்யாஸ்ரீயையும் தாக்கி ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்த வித்யாஸ்ரீ அருகே இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயில் கருகிய வித்யாஸ்ரீவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

    வித்யாஸ்ரீக்கு உடலில் 90 சதவீதத்துக்கு மேல் கருகியதால் அவரிடம் நேற்று இரவு நடத்த சம்பவங்கள் குறித்து மாஜிஸ்திரேட்டு வாக்குமூலமாக பெற்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வித்யாஸ்ரீ இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அப்போது அவரது உடலை பார்த்து தாய் லதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வித்யாஸ்ரீ இறந்த தகவலை அறிந்த அவருடன் படிக்கும் மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    வித்யாஸ்ரீயை ஆபாசமாக திட்டியும் தாக்கியதால்தான் அவர் மனமுடைந்து தீக்குளித்தார் என்பதால் இதற்கு காரணமான நந்தன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் திடீரென 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி கொல்லப்பட்டரை தெருவை சேர்ந்தவர் சந்தியாதேவி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி சரண்தேவி(5) என்ற மகளும், 10 மாதம் ஆன சவுமியா என்ற குழந்தையும் உள்ளனர்.

    இன்று காலையில் சந்தியாதேவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அவர், குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு கையில் வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்ற முயன்றார். இதை பார்த்த போலீசார், ஓடி சென்று தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள்.

    அப்போது அவர், போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து சந்தியாதேவியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான், கூலி வேலை செய்து வருகிறேன். எனது ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரது கடையில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் இருவரும் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம். இதனால் எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பிறந்த சான்றிதழிலும் தகப்பனார் பெயர் கார்த்திகேயன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அவர், என்னுடன் வாழ மறுத்து வருகிறார். குடும்ப செலவுக்கும் பணம் தருவதில்லை. இது குறித்து கேட்டால் என்னை அவர் அடித்து உதைக்கிறார். வலி தாங்க முடியாமல் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், இது உங்கள் குடும்ப வி‌ஷயம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    சேலம் பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேலவன். இவரது மனைவி ரேவதி (வயது 31). மனு நீதி நாளான இன்று காலை ரேவதி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென அவர் நுழைவு வாயில் முன்பு வைத்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது உறவினர் ஒருவருக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அவர் திருப்பி தரவில்லை என்றும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

    இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

    ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×