என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுசீந்திரம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்தது யார் ?
- போலீஸ் விசாரணை தீவிரம்
- சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் ஊற்றி அவர் கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் வாலிபர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் தற்கொலை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்