search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    • டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை சூலூர் செஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா (40). இவர்கள் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ராஜா வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராதா கோபித்து கொண்டு அவரது ககோதரி வீட்டுக்கு சென்றார்.

    இதனை நினைத்து மனவேதனை அடைந்த ராஜா விரக்தி அடைந்து வீட்டில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவேன உடல் முழுவதும் பரவியது.

    ராஜா வலியால் அவர் அலறி துடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து ராஜாவை மீட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×