search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணிகள்"

    • நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.

    இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. அரசு அமைந்த உடன் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள், புதிய அரசு விருந்தினர் மாளிகை, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    இதில் பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.இது தொடர்பாக எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், அதை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் இந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் ஆய்வுப்பணி களுக்காக வர இருப்பதால் அது குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • பணிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
    • கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊராட்சிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகளை தேர்வு செய்வதற்காக அவர் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை. முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், ராமர், தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் காமராஜ், செல்லபாண்டி, லிங்கம், வேல்முருகன், செல்வராஜ், தங்கராஜ், சிவசுப்பிரமணியன், ஜெகன், தங்கத்துரை, பொன்னுத்துரை, சிவபெருமாள், காசிபாண்டி, கைக்கொண்டான், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றி யத்தில் நீர்ப் பாசன மேலாண்மை நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தெற்கு கீரனூர் கிராமத்தில் கால்நடை மருத் துவ முகாமை தொடங்கி வைத்த அவர் இதன்மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்து ரையாடினார்.

    பின்னர் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டா ரங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    முனைவென்றி கிரா மத்தில் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத் தும் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலநெட்டூர் கிராமத் தில் ரூ.29.45 லட்சத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடர்பாக விவசாயி களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கலந் துரையாடினார்.

    கச்சாத்தநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளைகள், வைகை ஆற் றில் உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாய் சீர மைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல்,கீழ் நாட்டார் கால்வாய் ஆகிய வற்றைத் தூர்வாரி சீரமைக் கும் பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணர் வித்தியாசாகர், வேளாண்மைத் துறை நிபு ணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர்

    ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜவுளி பூங்காவில் திட்டப்பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி கிராமத்தில் 100 நாள் திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவித்த பல்வேறு திட்டங்கள் மாநில மக்களுக்கு ஏற்புடையதாக இருந்துள்ளது. எனவே பணபலம், மத அரசியல் மற்றும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஆகியவற்றை மீறி கர்நாடகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    தமிழக அமைச்சரவை மாற்றத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பொறுப்பை ஏற்றுள்ளது மாவட்டத்திற்கு பெருமை யளிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

    பழனிவேல் தியாக ராஜன் இலாகா மாற்றம் அவரது ஆடியோ சர்ச்சை அடிப்படையில் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதற்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் தொழில்பூங்கா தொடங்கப்படும் என்று மத்திய தொழில் மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறித்து மத்திய இணை மந்திரி முருகனிடம் விவாதித்துள்ளேன். தற்போது மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் விரைவில் தொடங்கு வதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் திட்டப் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனைக்குட்டம் புனரமைப்புக்கு ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிவகாசி சாட்சி யாபுரம், திருத்தங்கல் ெரயில்வே மேம்பாலங்கள் தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும்.

    விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சிவகுரு நாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கடங்கநேரியில் சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • சிறு பாலம்,சிமெண்ட் சாலைகளையும் தமிழ்செல்வி போஸ் திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் ரூ.13.93 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து அவர், வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ.13.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறு பாலம் மற்றும் 2 சிமெண்ட் சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், கடங்கநேரி ஊராட்சி தலைவர் அமுதா, தேன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் க கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வைட்டார்.
    • மழைநீர் தேங்காத வண்ணம், கால்வாய்களை தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, ஆகிய பகுதிகளல் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, நூலக கட்டிடத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து, பழையபேட்டையிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையில் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூர்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயார் செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலையத்தை புதிய வண்ணம் பூசவும், கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கவும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை சீராக பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக விற்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், சின்ன ஏரியை அழகுபடுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு தயார் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ் நிலையத்தை பார்வையிட்டு, பஸ்கள் பராமரிப்பு, இட வசதி குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில் பாப்பாரப்பட்டி, தாசாகவுண்டன் ஏரியில் சுற்றுசுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளையும், ஏரியைச் சுற்றி சுகாதார தூய்மை பணிகளையும், மேலும் பொதுமக்கள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலர் அறிவழகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் ரூ.11.24 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியில் இருந்து ரூ.4.64 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர் கலா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து பணிகள் நிறைவடைந்த மாறாந்தை 8-வது வார்டு ஊர் பொது கிணற்றில் ரூ.3.60 லட்சம் செலவில் நீர்மூழ்கி மோட்டார் அமைத்து குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் ஆதி திராவிடர் மயானத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி கட்டுதல் ஆகிய திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. கிளை செயலர்கள் வசந்த், கணேசன், வெள்ளத்துரை, சேகர்,அரசு ஒப்பந்ததாரர் முத்துபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சம் செலவில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நகர்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 2-ல், அத்தனூர் அம்மன் கோவில் தெரு வார்டு எண் 4-ல், ஆண்டாபுரம் ரோடு வார்டு எண் 1 மற்றும் வார்டு எண் 10, காமராஜர்த் தெரு மற்றும் வார்டு எண் 11-ல் பள்ளிவாசல் தெரு, 5-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் தார் சாலை வலுப்படுத்துதல் பணிக்கும் தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் ஈரக் கழிவுகளை தீர்வு செய்வதற்கான செயலாக்க கட்டமைப்புப் பணி,முசிறி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் கூட்டுறவு வங்கி அருகில் நிழற்குடை அமைத்தல், அதே திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் காட்டுப்புத்தூர் வார்டு எண் 13-ல், வடக்கு முத்துராஜா தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.75.7 லட்சம் செலவில் மேற்கண்ட திட்ட பணிகள் செய்ய பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ்.செல்வராஜ், தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சிவசெல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், அன்னபூரணி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவசெல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார். தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், காட்டுப்புத்தூர் நகர தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

    • மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
    • மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 15&வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்து நேதாஜி நகரில் நீண்ட நாட்களாக சாக்கடைக் கால்வாய் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க,., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கிராமத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் வங்கித் தலைவர் சின்னசாமி, கிளை செயலாளர்கள் பாண்டியன், சுப்பு, கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி மாது, வங்கி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் ராதா சென்றாயன், திம்மராயன், குமார், செல்வன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×