என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை  செயலாளர் ஆய்வு
    X

    நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

    • நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றி யத்தில் நீர்ப் பாசன மேலாண்மை நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தெற்கு கீரனூர் கிராமத்தில் கால்நடை மருத் துவ முகாமை தொடங்கி வைத்த அவர் இதன்மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்து ரையாடினார்.

    பின்னர் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டா ரங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    முனைவென்றி கிரா மத்தில் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத் தும் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலநெட்டூர் கிராமத் தில் ரூ.29.45 லட்சத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடர்பாக விவசாயி களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கலந் துரையாடினார்.

    கச்சாத்தநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளைகள், வைகை ஆற் றில் உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாய் சீர மைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல்,கீழ் நாட்டார் கால்வாய் ஆகிய வற்றைத் தூர்வாரி சீரமைக் கும் பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணர் வித்தியாசாகர், வேளாண்மைத் துறை நிபு ணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர்

    ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×