search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணிகள்"

    • விருதுநகரில் நகராட்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் நகராட்சி, அண்ணாமலையம்மாள் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கல்லூரி சாலையில் ரூ.200 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அறிவுத்திறன் பயிற்சி மையம்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் வி.என்.பி.ஆர் நகராட்சி பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் தயாளன் ராஜேஷ் காலனியில் உள்ள பூங்காவினை ரூ.44 லட்சம் மதிப்பிலும், லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை ரூ.40 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பு கட்டடம் அமையவுள்ள இடத்தியும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலை துறையின் வளர்்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் கோட்டம் திருச்சுழி உட்கோட்டம் ஆலடிப்பட்டி- அம்மன்பட்டி சாலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகளையும், பரட்டநத்தம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் நிறைவு பெற்ற பணிகளையும், இலுப்பையூர் சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 5 சிறு பாலங்கள் நிறைவுற்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் செய்தார்.

    அதன் பின்னர் நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தில் சுமார் ரூ.12 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் கல்லூரி கட்டும் பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தினை, பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு நிலை,மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

    இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி,உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சுந்தரபாண்டி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, மேலக்குயில் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சர் பீகார் சென்றுள்ளார். இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் தற்போது வரை எந்தவித மக்கள் நல திட்ட பணி களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இவர்கள் ஒதுக்கீடு செய்தது அனைத்தும் கலைஞர் நூலகம், கலைஞர் நினைவு சின்னம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காகவே. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்த பல்வேறு திட்ட பணிகளை தான் தற்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

    மதுரையில் வைகை கரை சாலை, சுற்றுச்சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தி.மு.க. அரசு திட்ட ப்பணிகள் எதையும் செய்யாததால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

    மதுக்க டைகளை மூடுவதாக மக்கள் மத்தியில் தெரிவித்து விட்டு அதிக வியாபாரம் இல்லாத மதுக் கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    வருகிற 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சியில் தொழில் நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் வரவுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது நலத்திட்ட உதவிகள் செய்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வரலாம் என பல தெரிவிக்கின்றனர். எந்த நடிகர் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல நிலைத்து மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய நடிகர்கள் இதுவரை வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மேலக்குயில்குடி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.4.89 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் கீழ் திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜீத் முன்னிலை வகித்தார்.

    சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி , மனோகரன், ராமலிங்கம், வில்வநாதன், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் முக்கிய பங்கு ஆகும். தமிழக அரசு அறிவுத்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் உறுப்பினர்களுடன் மாவட்டத்தில் ரூ.4.89கோடி மதிப்பில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்தார். மேலும் ரூ20.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
    • மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன், சிவக்குமார், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், காந்திராஜன், ஜவாஹிருல்லா, மணியன், அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாகும். பிரதானமாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை பொது ப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அன்பழகன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.10½ கோடி மதிப்பில் நடக்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் களஆய்வு நடத்தினர்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக களஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

    மேலும் வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வி, கூட்டுறவு, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பயன்கள், நிதிநிலை, செலவினங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிந்தபேரி நடுத்தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிய சிமெண்ட் சாலையை ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில், நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

    விழாவில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், தங்க தேவர், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், என்.எஸ். மணியன், காளிமுத்து, முப்புடாதி கணேசன், சப்ரி, சாமுவேல், அந்தோணி, பிரியா, அன்னம்மான், தேன்மொழி, இசக்கியம்மாள், ராணி லெட்சுமி, சத்யா, ஊராட்சி செயலர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2021 - 2022-ன் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சின்ன ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் மற்றும் மூலதன மான்ய திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.298 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு சத்திரம் - வடுகபட்டி (தென்மலை) சாலையில் பாலம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் சந்திரமோகன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், மேலநீலித நல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலைமணி, தலையாரி அழகுராஜா, பெரியா ண்டவர், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. துணைச்செ யலாளர் சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூராட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி நகர தி.மு.க. செய லாளரும், நகராட்சி துணைத் தலைவரு மான அந்தோணிசாமி, சிவகிரி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி, சமுதாய நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வா கிகள் விவசாய தொண்டர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, தொழில் நுட்ப அணி தங்கராசு உள்பட ஏராள மானோர் கலந்து கொ ண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு நன்றி கூறினார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

    அயன்கரிசல்குளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் மயான சாலை, அசரப்பட்டியில் ரூ.1.99 லட்சம் மதிப்பில் நடக்கும் நூலக கட்டிட பராமரிப்பு பணி, ரூ.2.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.9.578 லட்சம் மதிப்பில் நடக்கும் பட்டத்தரசியம்மன் ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், படித்துறை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து இலந்தை குளம், ஆயர்தர்மம், மூவரை வென்றான் உள்ளிட்ட பகுதி களில் அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, செயற்பொறி யாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், உதவி பொறியாளர்கள் வள்ளிமையில், ஜெயா, ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திட்டப்பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.
    • அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் 20-வது வார்டு கவுன்சிலர் சேக் ஹுசைன் நகர் மன்ற கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த கால கூட்டங்களில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என்னென்ன? எங்கே? எவ்வளவு? சதுர அடியில் இடம் உள்ளது என ஆய்வு செய்து பொதுமக்களும், எங்களுக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று வரை நடக்கவில்லை.

    நகரில் உள்ள வார்டுகள் குளறுபடிகள் பற்றி நான் மட்டுமல்ல, பல உறுப்பி னர்கள் அதை நிவர்த்தி செய்ய கோரிக்கையை முன் வைத்தனர். யார், யாருக்கு எந்த வார்டு என்பது பற்றி தெரியவில்லை. அதை தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களிடம் விளக்கி அவரவர் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறை வேறவில்லை. நகரின் மெயின் ரோடு பகுதி அழ காகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டி ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதித்து, ஆக்கிரமிப்பு களை குறைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நடக்கவில்லை.

    கீழக்கரையில் ஒப்பந்ததா ரர்கள் பணிகள் தரமானதாக வும், விரைவாகவும் நேர்மை யாகவும் இருக்கும் வண்ணம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கைக்கான பதிலை அடுத்த கூட்டத்தில் தெரி விக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
    • நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகி யவை இன்று மதுரையில் நடந்தது.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி மதுரை மாவட்டத் தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரு கிறது. அதன்படி ரூ.188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ.21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது.

    ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. ரூ.2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப் பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி யில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ.107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 ேகாடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழ கத்தின் 2-வது தலை நகரமாகவும், கோவில் நகர மாகவும் விளங்கும் மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மதுைர மாவட்டத்தில் முத்தாய்ப் பான திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் நேருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப் பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையா, கலெக் டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×