search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு
    X

    சிவகங்கை பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத் உள்ளார்.

    திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

    • சிவகங்கையில் ரூ.4.89 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் கீழ் திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜீத் முன்னிலை வகித்தார்.

    சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி , மனோகரன், ராமலிங்கம், வில்வநாதன், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் முக்கிய பங்கு ஆகும். தமிழக அரசு அறிவுத்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் உறுப்பினர்களுடன் மாவட்டத்தில் ரூ.4.89கோடி மதிப்பில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்தார். மேலும் ரூ20.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    Next Story
    ×