search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.

    ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • மதுரை மாவட்டத்தில் ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
    • நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகி யவை இன்று மதுரையில் நடந்தது.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி மதுரை மாவட்டத் தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரு கிறது. அதன்படி ரூ.188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ.21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது.

    ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. ரூ.2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப் பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி யில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ.107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 ேகாடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழ கத்தின் 2-வது தலை நகரமாகவும், கோவில் நகர மாகவும் விளங்கும் மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மதுைர மாவட்டத்தில் முத்தாய்ப் பான திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் நேருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப் பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையா, கலெக் டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×