என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகராட்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- விருதுநகரில் நகராட்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சி, அண்ணாமலையம்மாள் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கல்லூரி சாலையில் ரூ.200 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அறிவுத்திறன் பயிற்சி மையம்.
நமக்கு நாமே திட்டம் மூலம் வி.என்.பி.ஆர் நகராட்சி பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் தயாளன் ராஜேஷ் காலனியில் உள்ள பூங்காவினை ரூ.44 லட்சம் மதிப்பிலும், லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை ரூ.40 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.
பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பு கட்டடம் அமையவுள்ள இடத்தியும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்