search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஸ்வால்"

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.

    இந்த தரவரிசையில் வில்லியம்சன் முதல் இடத்தில் (818) யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2 முதல் 10 இடங்கள் முறையே டேரி மிட்செல், பாபர் அசாம், ஜோ ரூட், கவாஜா, விராட் கோலி, கருரத்ணே, ஹரி புரூக், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் உள்ளனர்.

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
    • ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 209 ரன்னும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்னும் எடுத்தார்.

    3 டெஸ்டின் 6 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 545 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 109 ஆகும். 50 பவுண்டரிகளும், 22 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    இதற்கிடையே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார்.

    டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும்.

    அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக தனது 11 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் அடங்கும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஜெய்ஸ்வால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நான் எனது வாழ்வில் அடித்த ஒட்டு மொத்த சிக்சர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்சில் அடித்துவிட்டார் என்று பெருமையாக கூறியுள்ளார். அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்.

    என்று கூறியுள்ளார்.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ரஞ்சி நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

    3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

    • 28 ஆண்டு கால வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
    • 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 12 சிக்சருடன் 214 ரன்கள் குவித்தார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர் அடித்திருந்தார். அந்த 28 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

    இரு இன்னிங்சையும் சேர்த்து இந்தியா ராஜ்கோட் டெஸ்டில் மொத்தம் 28 சிக்சர்களை நொறுக்கியது. ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற தங்களது உலக சாதனையை இந்தியா தற்போது மாற்றி அமைத்துள்ளது. 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    3 டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் இந்த தொடரில் இந்தியா இதுவரை 48 சிக்சர் அடித்துள்ளது. ஒரு தொடரில் அணி ஒன்றின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாகவும் இது பதிவானது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 47 சிக்சர் அடித்திருந்த இந்தியா, இப்போது அதை கடந்துள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

    1. நியூசிலாந்து – 75%

    2. இந்தியா – 59.52%

    3. ஆஸ்திரேலியா – 55%

    4. வங்கதேசம் – 50%

    5. பாகிஸ்தான் – 36.66%

    6. மேற்கிந்திய அணி -33.33 %

    7. தென் ஆப்பிரிக்கா – 25.00%

    8. இங்கிலாந்து – 21.87%

    9. இலங்கை – 00.00

    • டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்களில் டிக்ளேர் செய்தது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. 

    557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

    வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    • இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார்.
    • உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.

    அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.

    இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.

    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்தார்.
    • சர்ப்ராஸ் கான் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.
    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினர்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது.

    நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஜெய்ஸ்வால் 149 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ×