search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திரம்"

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.

    இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டும்
    • நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம்

    நாகர்கோவில்:

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . 1947-ம் ஆண்டில் தாய்திருநாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது . நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம் .

    சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் . முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்றனர் .

    இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணி காக்க உயிர் கொடுத்த காந்தியடிகள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை . இன்று நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது .

    இந்தியாவின் தனித்தன்மை கேள்விக்குறி ஆகி வருகிறது . சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது . நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டியது குடி மக்களாகிய நமது அனைவரின் கடமை , நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டிய தருணம் இது .

    சாதி மத வேற்றுமைகள் இன்றி ஒன்றாகக் கூடி இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றச் சபதம் ஏற்போம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.
    • விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தரங்கம்பாடி:

    இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி கிராமத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ. வுமான ராஜகுமார் தலைமையில் 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.

    நினைவு மணிமண்டபத்தில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாலை அணிவித்து

    எம்.எல்.ஏ. ராஜ்குமார் பாதயாத்திரையை தொடங்கினார்.

    விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பாதயாத்திரை குத்தாலத்தில் முடிவடைகிறது.நாளை 11ம் தேதி குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணல்மேடு சென்றடைகிறது. 12ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு

    13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடத்தை அடைகிறது.

    14ம் தேதி கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக பாதையாத்திரை சீர்காழி வந்தடைகிறது.

    சீர்காழியில் ராஜகுமார் எம்.எல்.ஏ தலைவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் மண்டபத்தை திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைத்து பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    இந்த பாதயாத்திரையில் மாவட்ட பொதுச்செயலாளர் கனிவண்ணண், பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் உள்ளீட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சிமன்ற தலைவர்கள் தில்லையாடி ரெங்கராஜ், திருக்கடையூர் ஜெயமாலதி சிவராஜ், ஆக்கூர் சந்திரமோகன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், ஆங்காங்கே வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.

    • தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள். பணியாளர்கள். மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்க ளிலும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 01.07.2022 அன்று புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல் நிலைப்பள்ளி. திறந்தவெளி கலையரங்கில் பள்ளி மாணவியர்கள் ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியினையும், நாகர்கோவில், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும், தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    லூர்தம்மாள் சைமன் பாலத்திலும், நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்திலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்துறையின் சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் எதிர்கால தலை முறையினர்களான மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் நிகழ்ச்சிகள், அலு வலர்கள் மற்றும் பணியாளர் களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருவாய் துறையின் சார்பில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளும், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளின் வாயிலாக பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் 15வது நாளான இன்று அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் நோக்கமே வருங்கால இளைய தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் உட்பட நாம் அனைவரும் நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், சுதந்திர போராட்ட வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மாட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×