search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"

    • தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
    • செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

    இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.

    ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.

    இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.

    • புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரைகடக்க உள்ளதால், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரைகடக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவேணடும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது.
    • காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பருவநிலை மாறி மாறி வருவதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். இதனால் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

    மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். இது போல் தங்களது வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும். சிரட்டை, டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் வீடுகளின் அருகில் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் அதில் தேங்கும் மழைநீர் மூலம் கொசு உற்பத்தியாகும். காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அங்குள்ள பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
    • தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விவரத்தையும் சேகரித்து, கண்காணித்து வருகிறோம்.

    அவிநாசி:

    தற்போது பல இடங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவிநாசி பகுதியிலும், காய்ச்சல் பரவல் ஆங்காங்கே தென்படுகிறது.அவிநாசி சுகாதாரத்துறையினர் சார்பில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அங்குள்ள பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம். அதோடு, அந்த ஊரில் வசிக்கும் கிராம மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம். அவ்வாறு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மருத்துவரின் பரிந்துரைக்கு சிபாரிசு செய்கிறோம்.

    தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விவரத்தையும் சேகரித்து, கண்காணித்து வருகிறோம். அவிநாசியை பொருத்தவரை காய்ச்சல் பரவல் இருந்தாலும், பெரிய அளவில் அச்சப்படும் வகையில் இல்லை.பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், பள்ளி நிர்வாகங்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கு சிறப்பு கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை முகாம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.
    • ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், இன்புளுவன்சா காய்ச்சலுக்கு தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குபல்லடம், பொங்கலூர்,சுல்தான்பேட்டை,செஞ்சேரிமலை,ஜல்லிபட்டி,செஞ்சேரிப்புத்தூர்,வேலம்பாளையம்,காமநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் நோயாளிகள் குளியலறை மற்றும் சுகாதார வளாகத்தில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. குடிப்பதற்கு குடிநீரும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.

    • உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    திருப்பூர்:

    தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டியுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26வாரம் நிறைவு பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் ஆதார் அட்டை, குறுஞ்செய்தி காண்பித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்வோர் இருதவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆனால் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம். கைவசம் 2.5 லட்சம் தடுப்பூசி உள்ளது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    • டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
    • வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் புழுக்கள் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டை சுற்றி உள்ள பழைய டயர், தேங்காய் மட்டைகளில் நீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியோர், கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமாறு வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.
    • நாடு முழுவதும் 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை.
    • சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில், 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இம்மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தொற்று பரிசோதனையில் யாருக்காவது தெரிய வந்தால், ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவர். தொற்று பாதித்த 28 பேரில் தற்போது 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.மக்கள் பயப்பட வேண்டியதில்லை.

    அதே நேரம்அலட்சியமாக இருப்பது பெரும் தவறு. தொற்று வந்த பின் வருத்தமடைவதை விட முன்னெச்சரிக்கை இருந்து கொள்வது நல்லது.வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×