search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாண்டஸ் புயல்"

    • அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது.
    • நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது மழை ஓய்ந்து உள்ளது. கனமழையின் போது தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதும் வடிய தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மழை நின்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    காட்டுப்பாக்கம் அம்மன் நகர், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை யமுனா நகர், பாரிவாக்கம் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வெளியேறாமல் தேங்கிஉள்ளது. பல நாட்களாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீர் தற்போது நிறம் மாறி துர்நாற்றம் அடிக்க அடிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த தண்ணீரிலேயே வெளியே நடந்து செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

    இப்பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மீண்டும் நீர் சுரப்பதால் நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

    நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தாயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.
    • சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது‌. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், புயலாக மாறினால் தமிழகத்தை யொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிரும் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 6-ந்தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில் 11-ந்தேதி காலையில் திடீரென்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் 12-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீண்டும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் ஓய்ந்த நிலையில் கடலில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. ஆனால் திங்கட்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 15 ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் . மேலும் வங்க கடல் பகுதிகளில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்திரும்ப வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • 300 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கியது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் நெற்பயிரில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 9-ந் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்த போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி வட்டத்தில் கனமழை பெய்தது.

    கனமழையால் நெமிலி வட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பின. மேலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆறு, கல்லாற்றில் அதிகளவில் தண்ணீர் வெள்ளமாக சென்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

    இதனால் பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம், சிறுவளையம், கல்பலாம்பட்டு, வெளியநல்லூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன. விளை நிலங்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லா ததால் பயிர்கள் அழுகும் நிலை காணப்படுகின்றது.

    நீரில் முழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் வருவாய் துறையினர் முறையான கணக்கெடுத்து தமிழக அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது.
    • மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு குடிநீர் எரிகளில் தண்ணீர் வற்றியதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    அப்போது குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது. கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து சென்னை நகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைளை அரசு தீவிரப்படுத்தியது. ஏரி, குளங்களில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தூர்வாரி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பூந்தமல்லி, மாங்காடு பகுதியில் தேங்கும் வெள்ள நீரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரியில் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

    பருவமழை காலங்களில் பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், வரதராஜபுரம், மேப்பூர், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பூவிருந்தமல்லி, மலையம்பாக்கம் ஊராட்சி, மாங்காடு நகராட்சியில் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக மாங்காடு நகராட்சியில் பெரும் பாதிப்பை உண்டாகியது.

    இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு நகராட்சியில் ஏற்படும் வெள்ள நீரை சிக்கராயபுரம் கல்குவாரியில் சேமிக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டனர். தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அதிகாரிகளும் ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கையில் கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.

    பூந்தமல்லியில் இருந்து சிக்கராயபுரம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 30 அடி அகலத்தில் கால்வாய்கள் அமைத்தனர். தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக இந்த கால்வாய் வழியாக சென்ற மழைநீர் கல்குவாரி பள்ளத்தில் சென்று சேர்ந்தது. தொடர் மழை காரணமாக இங்குள்ள 3 கல்குவாரி குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.

    மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.

    சிக்கராயபுரம் கல்குவாரியை பொருத்தவரை சுமார் 1 டி.எம்.சி வரை சேமிக்கும் அளவிற்கு ராட்சத பள்ளங்கள் உள்ளது. தற்போது வரை 3 கல்குவாரி குட்டை கள் நிரம்பி உள்ளதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த தண்ணீரை கோடைக்காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிக்கராயுபுரம் கல்குவாரி குட்டையில் தண்ணீரை தேக்கும் திட்டம் முழுபலனை கொடுத்து இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கல்குவாரி குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதேபோல் தண்ணீரை சேமிக்கும் புதிய ஏரிகளை அரசு உருவாக்கி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 22 மண்டலங்களில், 46 கிராமங்கள் மற்றும் 7 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
    • 8,215 ஹெக்டேர் விவசாய பயிர்கள், 545.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    திருப்பதி:

    மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்வெங்கடரமணரெட்டி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மண்டல வாரியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கே.வெங்கடரமண ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சுமார் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பயிர் இழப்பு, மாடு, ஆடு இழப்பு, வீடுகள் சேதமடைந்த அனைவருக்கும் அரசு ஆதரவு அளிக்கும்.

    மாவட்ட நிர்வாகம், அரசு விதிமுறைகளின்படி பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கள அளவில் ஆய்வு செய்து வருகிறது.

    22 மண்டலங்களில், 46 கிராமங்கள் மற்றும் 7 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 8,215 ஹெக்டேர் விவசாய பயிர்கள், 545.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    3,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 105 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,416 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7 கன்று குட்டிகள், 9 செம்மறி ஆடுகள் இறந்துள்ளன. 142.19 கி.மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன.

    மின்சாரத்துறைக்கு ரூ.19.78 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து முழுமையான மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • படகு, வலை, மிஷின் சேதங்களை ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் கணக்கிட்டு கூறினர்.
    • மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ கூறினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் "மாண்டஸ்" புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர் படகு, வலை, மிஷின் சேதங்களை கணக்கிட்டு அவரிடம் கூறினர்.

    மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ கூறினார். பின்னர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் சென்று, அனைத்து மீனவர் பகுதி சேதங்கள் குறித்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோரிடம் ஆலோசனை  நடத்தினார். இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன், கவுன்சிலர்கள் சுகுமாரன், சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி
    • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

    மேலபுலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து மேலபுலம் - சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார்.

    மேலபுலம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கீழ்வீதி ஊராட்சியில் மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
    • பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் உருவான "மாண்டஸ்" புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கல்பாக்கம் அருகே உள்ள கடலோர பகுதிகளான உய்யாலிகுப்பம், புதுபட்டினம்குப்பம் போன்ற பகுதிகளை இன்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, மாவட்ட செயலாளர் சுந்தர், மீன்வளத்துறை கமிஷனர் பழனிசாமி மற்றும் அதிகாரிளுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் உய்யாலிகுப்பம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    அனைத்து மீனவர்கள் பகுதிகளிலும் கிராமங்ககளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைப்பது போன்ற திட்டங்கள் இருந்தாலும் நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு உள்ளது, அது சரியானதும் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உய்யாலிகுப்பம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்ட அமைச்சர் அங்கிருந்து செய்யூர் வட்டம், கடலூர், சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்.

    • மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது.
    • பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்த "மாண்டஸ்" புயலானது மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி, தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் மீனவர் கிராமங்களை தாக்கியது. இதில் கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது. சில பகுதிகளில் வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

    இப்பகுதி பாதிப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் கௌதமன், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, சதீஷ்குமார், மோகன்குமார், தேசிங்கு, இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது துண்டில் வளைவு அமைகக் வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவர் கிராமம் சேதங்களை ஆய்வு செய்து, கணக்கிட்டு அதன் விபரங்களை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும். இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    • மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
    • நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதேபோல் 21 கால்நடைகள் இறந்து இருக்கிறது.

    மேலும் 2,668 கோழி மற்றும் வளர்ப்பு பறவைகள் இறந்துள்ளன. நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×