search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள்"

    • அனைத்து ரோடுகளும் சீர்செய்யப்படும் என யூனியன் சேர்மன் பாலசிங் கூறினார்.
    • தங்கள் பகுதியில் உள்ள தேவைகளை கவுன்சிலர்கள் எடுத்து கூறினர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது.

    யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மீராசிரசுதீன், ஆணையாளர்கள் ஜாண்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், செந்தில், ஜெயகமலா, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி, ராமலெட்சுமி மற்றும் பல்வேறு வளர்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முதலில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா., பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    முருங்கை மகாராஜா (அ.தி.மு.க.):-

    உடன்குடி பகுதியில் கிராம புறங்களில் உள்ள ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க உடன்குடி பகுதியில் உள்ள நீர் பிடிப்பு குளங்கள் அனைத்தையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

    பாலசிங் (சேர்மன்):-

    உடன்குடி பகுதியில் உள்ள பழுதான ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரோடுகளும் சீர்செய்யப்படும், இந்த ஆண்டு நமது பகுதியில் பருவ மழைமிகமிக குறைவாக உள்ளது. இருந்தாலும் அணைக்கட்டுகளில் உள்ள தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கவுன்சிலர்கள்தங்கள் பகுதியில் உள்ள தேவைகளை எடுத்து வைத்து பேசினார்கள். அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் கூறினார்.

    • மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.
    • இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் இடறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் தற்போது பெய்து வரும் பருவ மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
    • வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டப்பொறியாளா் ரமேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.

    இதில், தி கன்ஸ்யூமா்ஸ் கோ் அசோசியேஷன் தலைவா் காதா்பாட்ஷா பேசியதாவது:-

    திருப்பூா் மாநகரில் சாலை பராமரிப்புக்காகத் தோண்டப்படும் குழிகள் இருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கா்கள் ஒட்டவேண்டும். அவிநாசி தோ் வரும் நெடுஞ்சாலைப் பகுதி மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஆகவே, உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.

    நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    காங்கயம் சாலையில் டிஎஸ்கே மருத்துவமனை பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல, திருப்பூா் ெரயில் நிலையம் முதல் வஞ்சிப்பாளையம் வரை அனைத்து சாலைகளும் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் (சட்ட விழிப்புணா்வு அணி) மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அது தொடா்புடைய ஒப்பந்ததாரா்களால் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் முறையாக மறுசீரமைப்பு செய்வதில்லை. ஆகவே உரிய கவனம் செலுத்தி அனைத்து சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • மேம்பாலம் கட்டுவதற்காக ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந் தேதி முதல் ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனால் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய இடத்திற்கு கூடுதலாக10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக பெட்ரோல் செலவும் ஆனது.

    இந்நிலையில் தூரத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழியை கண்டுபிடித்தனர்.

    அதன்படி மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் சாலையில் மறுபுறத்தில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் முடுக்குகாடு ஊர் வழியாக சென்று நடுநிலைப் பள்ளியை கடந்து சென்றால் துறைமுகச் சாலையில் மேம்பாலத்தின் மறுகரைக்கு சென்று விடலாம்.

    இதனால் அவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மிச்சமானது. ஆனால் இந்த முடுக்குகாடு ஊர் வழியாக செல்ல வேண்டும் என்றால் 300 மீட்டர் தூரம் உள்ள உப்பளம் பகுதியை கடந்த செல்ல வேண்டும் இந்த உப்பள பகுதி மணல் சாலையாகும்.

    தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது. அதிக தூரத்தை கடந்து செல்ல விரும்பாதவர்கள் இந்த சகதி குளம் வழியாக துணிந்து சென்று வருகின்றனர். பயணத்தின் போது பலர் சகதியில் விழுந்து எழுந்து செல்கின்றனர். பலர் காயமடைந்து செல்கின்றனர்.

    மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் வருகிற 11-ந் தேதி வரைக்கும் இந்த பயணம் தொடரும் என கூறப்படுகிறது.

    எனவே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அலுவலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும்.

    திருப்பூர்:

    சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டத்தை கையிலெடுக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பா.ஜ.க. ஆண்டிபாளையம் மண்டல் தலைவர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல உதவி கமிஷனர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இடுவம்பாளையத்திலிருந்து வித்யாலயம் மற்றும் பாரப்பாளையத்திலிருந்து முருகம்பாளையம் செல்லும் சாலைகளில், பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஓராண்டுக்குமுன் குழி தோண்டப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ரோட்டை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.
    • மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதிகள்மற்றும் கடைவீதிகளில் சுற்றிததிரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் 11ந் தேதிக்குள் பிடித்து கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கப்பட்ட கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும்.

    அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் நேற்று வரை மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர். நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாடுகளை பிடித்தனர். நகராட்சி மூலம் பிடிக்கப்பட்ட மாட்டிற்கு 1000 ரூபாய் விதம் அபராதம் பாரமரிப்பு செலவும் வசூலிக்கபடும் எனவும் தொடர்ந்து மாடுகள் பிடிக்கபடும் என நகராட்சி ஆணையர்ஹேமலதா தெரிவித்தார்.

    • ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.
    • இதேபோல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதே போல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    இந்த பகுதியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரி கோதண்ட ராமன் தலைமை யிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் சாலைகளை அளவீடு செய்தனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை அருகே பெய்த மழையால் சாலைகள் குளம் போன்று காட்சி அளிக்கின்றன.
    • பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் முத்தரையர் சிலை அருகே மழைக்காலங்களில் சாலையானது சேறும், சகதியுமாக, மிகுந்த பள்ளமாக குளம் போல் காட்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டையில் இருந்து செம்பட்டி வழியாக புலியூரான் தென்பாலை கிராமத்திற்கு பள்ளி பஸ்கள் மாணவர்களை அழைத்து வந்து செல்கின்றன.

    அந்தப் பகுதியில் தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. மில் வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    குளம் போல் காட்சி அளிக்கும் பாதையில் அரசு பஸ்களும், தனியார் பள்ளி வாகனங்களும் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று வருகின்றன. அதில் செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் இந்த சாலையில் பயணம் செய்கின்றனர்.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று செம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
    • பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

    சேறு-சகதி

    இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் சானல்களில் மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்பவர்களும் வாகனங்களில் செல்பவர்களும் சற்று கவனக்குறைவாக சென்றால் சகதியில் சிக்கி வழுக்கி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பல வார்டுகளில் உள்ள சாலைகளிலும், மெயின் பஜார் சாலைகளிலும் உள்ள கழிவுநீர் சானல்கள் பாதி அளவு கட்டப்பட்டு பாதி அளவு உடைந்து போன நிலையில் உள்ளதால் சானலில் தேங்கும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பேரூராட்சி நிர்வாக த்தினர் இது குறித்து கண்டு கொள்ளவே இல்லை. உடைந்து போன பல கழிவுநீருக்கானல்களை சிமெண்டால் பூசி இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும் சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற அலுவலகம் உள்ள மேல சாத்தான்குளம் சாலைகளின் இரு கரையோரங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    குறைகளை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுடைய கவனத்திற்கு கொண்டு சென்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்வதே இல்லை. தொடர்ந்து இப்படி சானல்கள் உடைபட்டு கொண்டு இருந்தால் சாத்தான்குளம் நகரிலுள்ள கழிவுநீர் சானல்களில் தேங்கியுள்ள கழிவு நீர் அனைத்தும் சாலைகளில் தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக உடைபட்ட கானல்களின் பாதைகளை சிமிண்டால் கட்டி சீரைமைக்கா விட்டால் 15வார்டு பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று நகர ம.தி.மு.க. செயலாளர் ஜெயராஜன் கூறியுள்ளார்.

    • வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.
    • 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டைகளை மேயர் மகேஷ் வழங்கினார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப் பன், நவீன்குமார், மேரி ஜெனட் விஜிலா, அக்‌ஷ்யா கண்ணன், அனிலா சுகுமா ரன், அருள் சபீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக்கப் பட்ட 1, 2, 3, 50, 51, 52 வார்டுகளில் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 5 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரி களை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 274 சாலைகளை சீரமைக்க ரூ.64 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப டும் என்றார்.

    இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொருட்காட்சி மைதானத்தில் உள்ள மணல்களை அப்புறப்படுத்த ரூ.23 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.

    இதற்காக அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். தற்பொழுது மின்விளக்கு பிரச்சனைகள், வீடுகளில் குப்பை எடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.ஆனால் ஓடைகளில் உள்ள குப்பைகள் சரிவர எடுக்கப்படவில்லை. சாலைகளும் மிகவும் பழுதாகி உள்ளது. அந்த சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கான பட்ஜெட் டில் ரூ.2.50 கோடி பற்றாக்குறை என தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில செலவினங்கள் எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பதை விரிவாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. இது போல செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி வாகனங்களை பழுது பார்க்க ஒர்க் ஷாப் அமைக்க வேண்டும்.

    வலம்புரி விளை குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தினால் வட்டவிளை பகுதி மக்கள் பாதிக்கப்ப டுகிறார் கள். பலர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.எனவே குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோணம் முதல் எறும்பு காடு வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது‌. கேப் ரோடு , மீனாட்சிபுரம் சாலை உள்பட மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். அனைத்து சாலைகளும் இரு வழி சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும்.

    இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்‌. சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை விரைவில் சீர மைக்கப்படும். நாகர் கோவில் மாநகராட்சியில் உள்ள வாகனங்களை பராமரிக்க ஒர்க் ஷாப் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வலம்புரி விலை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 1 கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி தேவைப்படுகிறது.நாகர்கோவில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி யை இந்தியாவிலேயே முதல் மாநகராட்சியாக மாற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.


    இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. 

    இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
    • மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.


    இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.


    எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    ×