search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள்"

    • புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது.
    • எம்.எஸ்.எம். ஆனந்தனை ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் பச்சாங்காட்டு பாளையம் ராஜேஷ் நகரில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், துணைத் தலைவர் கார்த்திகா மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், வடக்கு ஒன்றிய இளைஞரணி கோவிந்தராஜ் மற்றும் கரைப்புதூர் ராமமூர்த்தி, விஸ்வநாதன், ஹரி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து குன்னாங்கல் பாளையத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆனால் சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனை குன்னாங்கல்பாளையம் ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மேலும் புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவதாகவும், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், மற்றும் சாய ஆலை நிர்வாகத்தினரை வைத்து ஒரு அமைதி கூட்டம் நடத்தி அதில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

    • மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
    • சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.

    மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.

    தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.

    மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.

    இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.
    • சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் அங்கேரிபாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மறியலுக்கு பாஜக., மண்டலத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா்.

    மறியலில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 15 வது வாா்டில் ஒரு தனியாா் நிறுவனம் மட்டுமே உள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரா்கள் ஈடுபட்டிருந்தனா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்று பயன்பாட்டில் உள்ள பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.ஸ்ரீநகா் பிரதான சாலை, மஹாவிஷ்ணு நகா், ஏவிபி லே- அவுட் பள்ளி வீதி ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    ஆகவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், ஒப்பந்ததாரா்கள் தனியாா் நிறுவனம் உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்ததால் வேறுவழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில் மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்க அறிவுறுத்தியதன்பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள்.
    • ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    மடிப்பாக்கம், ராம்நகர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தண்ணீர்தான். மழை வந்தால் தண்ணீர் தேங்கும் என்பது தான்.

    ஆனால் இப்போது இந்த பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வடிகால் ஓடை மற்றும் பாதாள சாக்கடை கால் வாய்கள் அமைக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள். பல மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முடியவில்லை. ராம்நகர், மடிப்பாக்கம், குபேரன்நகர், மகாலெட்சுமி நகர், குபேரன் நகர் விரிவு உள்பட எல்லா பகுதிகளிலும் 25-க்கும் மேற்பட்ட தெருக்களில் சாலைகள் இதே நிலையில் தான் உள்ளன.

    கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் இந்த சாலைகளில் கிடக்கும் குண்டுகளில் நீர் நிரம்பியும், தோண்டி போடப்பட்டிருக்கும் மண்குவியல்கள் சகதியுமாகி நடந்தும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பணிகளை செய்ய வேண்டியது அவசியம். அடர்த்தியான குடியிருப்பு பகுதி என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்கள் குடியிருப்புவாசிகள். மாட்டு வண்டிகள் கூட செல்ல முடியாத சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுதான் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, இந்த பகுதியில் மிகப்பெரிய திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ வாட்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பணிகளை விரைந்து முடிக்கவும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் 124 சாலைகளில் 40 சாலைகளில் நடைபெறும் பணிகள் இன்னும் 3 நாட்களில் முழுமையாக முடிவடையும் என்றார்.

    இந்த பகுதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து பருவமழை தொடங்குவதற்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துடன் இணைத்துவிட திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுவரை 800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் மேலும் 592 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்காலிகமாக பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் அவசர நிதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கமிட்டி பரிந்துரைக்கும் சாலைகளை உடனடியாக பார்வையிட்டு சீரமைக்க டெண்டர் விடவும் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    • மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.
    • போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய வெளுத்துகட்டிய மழை பகலில் கொஞ்சம் ஓய்வு கொடுத்து நேற்று இரவிலும் சில இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.

    ஒரேநாள் மழையை தாக்குபிடிக்க முடியாமல் பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழிகள் போல் காட்சியளிக்கின்றன. வளசரவாக்கம், மதுரவாயல், ஏரிக்கரை ஆழ்வார்திருநகர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோடம்பாக்கம் உள்பட பல இடங்களில் சாலைகள் படுமோசமாக உள்ளன.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்காமல் இருப்பதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். பலர் கீழே விழுகிறார்கள்.

    சைக்கிளில் பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் குழிகளில் விழுந்து தடுமாறி விழுகிறார்கள். கை, கால்களில் காயங்களுடன் பரிதாபமாக செல்கிறார்கள். மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.

    மெயின்ரோடுகள் பார்க்க பகட்டாக தெரிந்தாலும் உட்புற சாலைகள் படுமோசமாக உள்ளன. போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
    • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நிழல் தரும் மரங்கள் இல்லாததால் மதுரை நகர சாலைகளில் வெயில் சுட்டெரிக்கிறது.
    • வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    மதுரை

    'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்', மரங்களை வெட்டக்கூடாது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், மரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறியவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை, ஆக்சிஜன், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு மரங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் உள்ள மரங்களை வெட்டக்கூடாது,  மரத்தை அப்புறப்படுத்தி னால் அதற்கு பதிலாக 5 மரங்களை நட வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது.

    ஒரு காலத்தில் கடம்பவனம் என்றழைக்கப்பட்ட மதுரை நகரை சுற்றி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. சாலையின் இருபுறமும் பசுமை போர்வை போல் மரங்கள் வளர்ந்து காணப்படும். காலப்போக்கில் வளர்ச்சி திட்டங்கள், நகர மயமாக்குதல் என்ற பெயரில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன.

    மதுரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்த ஆல, அரச மரம் என ஆயிரக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கம் காரணமாக வெட்டப்பட்டது.மதுரை- திருப்பரங்குன்றம் ரோடு, கே.கே. நகர் - ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சாலை, அழகர் கோவில் ரோடு, மாவட்ட நீதிமன்ற சாலை, நத்தம் ரோடு, வைகை கரை சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வில்லாபுரம், அவனியாபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை மற்றும் சிறிய தெருக்கள் முதல் பெரிய தெருக்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கம் செய்ய வெட்டப்பட்டது. சில இடங்களில் மின் கம்பங்கள் நடுவதற்கும் மரங்கள் அகற்றப்பட்டன.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் இருந்து அழகர் கோவிலுக்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் பல ஆண்டுகள் வளர்ந்து இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்றப்ப ட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலை வசதி மேம்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் போது நிழலுக்கு ஒதுங்க கூட மரங்கள் இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். இதுபோன்று நகரின் பல்வேறு சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.

    தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதி அடைகின்றனர். மதுரையில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு குறைந்து கொண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெப்பநிலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் தட்பவெப்பநிலையை அங்குள்ள மரங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் நகரில் இருந்த மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டதால் வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    • கடங்கநேரியில் சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • சிறு பாலம்,சிமெண்ட் சாலைகளையும் தமிழ்செல்வி போஸ் திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் ரூ.13.93 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து அவர், வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ.13.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறு பாலம் மற்றும் 2 சிமெண்ட் சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், கடங்கநேரி ஊராட்சி தலைவர் அமுதா, தேன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
    • பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

    ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

    இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

    தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • 6 கிராமத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவியநகர் வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    அறவழி போராட்டம்

    இந்த சாலைகளை திப்பணம்பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி, பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனை கண்டித்து 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அறப்போராட்டத்திற்கு சமூக சேவகர் காசிமணி தலைமை தாங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார் பாண்டியன், துரைசாமி, உத்திர குணபாண்டியன், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா என்ற அருள் பாண்டி, கல்லூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் மேரி மாதவன், சீனிவாசகம், அயோத்தி ராமர், பூவனூர் ஞானபிரகாசம், ஜோசப், வார்டு உறுப்பினர் சுப்புராஜ், தங்கப்பழம், சண்முக செல்வன், முருகன், அண்ணாதுரை, சண்முகம், பொன்னுதுரை, ஜெய குட்டி, அமல்ராஜ், ஜெயபால், வழக்கறிஞர் உமாபதி, வைகுண்டராஜ், காமராஜ், குத்தாலிங்கம், கவிதா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மத்திய அரசு நிதி குறைத்து கொடுத்தாலும் தமிழகத்தில் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் ரூ.800 கோடி செலவில் பழுதடைந்த அரசு தொடக்கப் பள்ளிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா போன்ற பிரச்சினைகளை சமாளித்து கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட பொழுதிலும், நிதி மேலாண்மை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மிகச் சிறப்பாக உள்ளது.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.85 ஆயிரம் கோடி வழங்கிய மத்திய அரசு, கடந்த பட்ஜெட்டில் அதை ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளது. மத்திய அரசு நிதி குறைத்து கொடுத்தாலும் தமிழகத்தில் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும்.

    ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

    • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் நேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் ஆணை யாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, ரமேஷ், டி.ஆர். செல்வம், அனிலா சுகுமாரன், நவீன் குமார், அய்யப்பன் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2-வது வார்டுக்கு உட்பட்ட ஆளுர் பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பொது நிதியிலிருந்து அந்த பகுதியில் போர்வோல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதிக்கு வளர்ச்சி பணிகளுக்கென ரூ6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமைஅளித்து பணியை செய்ய வேண்டும்.

    பார்வதிபுரம் பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை சரி செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகள் நடை பெறும் போது அந்த வேலை களை கண்காணிக்க ஒர்க் இன்ஸ்பெக்டரை கொண்டு கண்காணித்தால் அந்த சாலைகள் தரமானதாக இருக்கும்.

    நாகர்கோவில் நகரில் தனியார் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பீச் ரோடு சந்திப்பில் உள்ள சிமெண்ட் தடுப்பு கற்களை மாற்ற உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கான வரி விதிப்பை முறையாக அமல்படுத்த வேண்டும். காலி மனைகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது

    பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டார் போலீஸ் நிலையம் முதல் பீச் ரோடு வரை உள்ள சாலையிலும் செட்டிகுளம் முதல் சவேரியார் ஆலய பகுதியுள்ள இடங்களிலும் ஏற்கனவே சாலை விரி வாக்கத்திற்காக கடைகள் இடிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு சில கடைகள் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிவி.டி. காலனி பூச்சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை வேண்டும் என்று கவுன்சி லர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு மேயர் மகேஷ் பதில் அளித்து பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-

    புத்தன் அணை முக்கடல் அணை தண்ணீரை ஆளூர், தெங்கம்புதூர் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பதற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் போடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மண் சாலைகளை பராமரிக்க ரூ.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகளுக்கும் விரைவில் டெண்டர் பிறப் பிக்கப்படும். சாலை பராம ரிப்பு என்று தமிழகத்திலேயே அதிக நிதியை நாகர்கோவில் மாநக ராட்சிக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த பணிகள் அனைத்தும் நடைபெறும் போது 52 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்றப்படும்.திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளினால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவது உண்மைதான்.

    இது தொடர்பாக அதிகா ரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் கள். பீச் ரோடு- செட்டி குளம் பகுதியில் சாலையை விரி வாக்கம் செய்வது தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம். வரி வசூலை பொருத்தமட்டில் அரசு என்ன நிர்ணயம் செய்துள்ளது அதன் அடிப்படையில் தான் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டுள் ளோம். மார்ச் 31-ந் தேதிக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளார்கள். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×