search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிவாக்கம்"

    • பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
    • புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி பொள்ளாச்சி- பழனிச்சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.நகரப்பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள், வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கோவை- பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாண மாணவ, மாணவிகள் தினசரி இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றனர்.

    இது தவிர வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள வி.பி.புரத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.அனைத்து பணிகளையும் உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இதன் மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறையும். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
    • நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தகவல் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய ரோடுகளில் ஈரோடு-சென்னிமலை ரோடு ஒன்று. ஈரோடு மாநகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரங்–கம்–பா–ளை–யம், சுற்–று–வட்டச்–சாலை, வெள்ளோடு, பெருந்துறை ரெயில் நிலையம் வழி–யாக இந்த ரோடு செல்கிறது.

    இது எப்போதும் பரப ரப்பும், போக்–கு–வ–ரத்து நெரி சல் மிகுந்–தும் காணப்படும். இந்த ரோட்டில் ஈரோடு மாநகராட்சி பகு–தியிலேயே சாஸ்திரிநகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்–ளது. இந்த பாலத்–தின் இணைப்பு சாலை சரி–யாக இல்லை.

    எனவே ஈரோட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்–லும் வாகன ஓட்–டி–கள் மிக–வும் சிர–மப்–ப–டு–கின்–ற–னர்.

    குறிப்பாக பாலத்தை யொட்டியே தமிழ்–நாடு அரசு போக்குவ ரத்து க்கழக பணிமனை உள்–ளது. 3 பணி–மனைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவ தால் தினமும் பணிம னைக்கு வரும் அனைத்து பஸ்களும் இங்கு நிறுத்த ப்படுவதால் போக்குவர த்து நெரிசலும் ஏற்படுகிறது.

    இந்த காரண ங்களால், சாஸ்–திரி நகர் ரெயில்வே மேம்பால த்தில் இருந்து ஈரோடு சாலையை இணை க்கும் வகை–யில் இணைப்பு பாலம் அமைக்க வேண்–டும் என்று பொதும க்களும், வாகன ஓட்–டி–களும் கோரி க்கை விடுத்து வந்தார்கள். இது–தொ–டர்–பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்–டர் ராஜகோ–பால் சுன்–கரா நெடுஞ்–சா–லைத்–துறை அதிகா–ரி–க–ளுக்கு உத்தரவி ட்டார்.

    அதன்–பேரில் நெடுஞ்–சாலைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு கோட்ட ப்பொறியா–ளர் மாதேஸ்–வ–ரன் ஒரு விளக்க அறிக்–கையை மாவட்ட கலெக்–ட–ருக்–கும், சென்னை கிண்–டி–யில் உள்ள நெடுஞ்சா–லைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியா–ள–ருக்–கும் அனுப்பி உள்–ளார். அதில் கூறப்பட்டு இருப்–ப–தா–வது:- ஈரோடு மாவட்ட த்தின் முக்–கிய சாலையாக ஈரோடு-சென்னி–மலை ரோடு உள்ளது.

    இங்கு ஒருங்கி ணைந்த சாலை உள்கட்–ட–மைப்பு மேம்பாட்டு திட்டத்–தின் மூலம் சாலை சந்–திப்பு மேம்–பாட்டுப ணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்–கப்–பட்டு உள்–ளது. இதற்–கான ஒப்–பந்–தம் முடிவு பெற்று பணிகள் தொடங்கி உள்–ளன. மேலும் சாலை சந்–திப்பு மேம்–பாட்டு பணி க்காக ரோடு அகலப்படுத்–த–வும், மழை –நீர் வடி–கால் அமைக்–க–வும் ஆக்கி–ர–மிப்–பு–கள் அகற்றப்பட்டு வரு–கின்–றன.

    மேம்பாலத்தின் அணுகு சாலை–யில் வாக–னங்–கள் குழப்பமின்–றி–யும், பாதுகாப்பா–க–வும் செல்ல சாலை சந்திப்பு வடிவமைப்பு (ரவுண்டானா) நெடுஞ்–சா–லைத்–துறையின் சாலை பாதுகாப்பு அலகு அதி–கா–ரி–க–ளால் பரி–சீ–லனை செய்யப்பட்டு ஒப்–பு–தல் பெறப்பட்டு இருக்கிறது. இங்கு பரீட்–சார்த்த முறை யில் தற்காலிக தடுப்புகள் மூலம் வாக னங்கள் அனுமதிக்கப்படு–கின்–றன. இங்கு நிரந்தர கட்–ட–மைப்பு மேற்–கொள்–ளப்–படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் பரீட்சார்த்த முறை–யில் தற்கா–லிக ரவு ண்டானா அமைக்–கப்–பட்ட பிறகும், இங்கு போக்கு வரத்து நெரிசல், விபத்–து–கள் ஏற்படுவதை தடுக்கவே ஈரோடு சாலை–யில் இருந்து மேம்–பாலத்–துக்கு இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொது–மக்–கள் மற்றும் வாகன ஓட்–டி–கள் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பி டத்தக்–கது.

    • சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகளை சுறுக்கி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
    • பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணிகள் வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்கள், குடியிருப்புகள் கட்டடங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சீர்காழி புறவழிச் சாலையில் எருக்கூர் ,கோயில் பத்து, செங்கமேடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப்பணியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையின் குறுக்கே பாதியளவிற்கு மேல் சாலைகள் குறுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

    ஆனால் கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்து போதிய எச்சரிக்கை பலகை திசை மாறி செல்லும் அறிவிப்புபலகை, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

    இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

    தொடரும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு கட்டைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் ஆகியவற்றை போதிய அளவு அமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சாலை விரிவாக்க பணி முடிந்தும் அந்த இடத்தில் விளக்கு பொருத்தப்படாமல் இருக்கிறது.
    • சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர், மகாலட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி மெயின்ரோடு, ஆவணம் ரோடு இணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது.

    சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ - மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின் கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

    • சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
    • காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

    இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 440 கோடியில் மதுரை ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
    • 4 மாடிகளுடன் நுழைவுவாயில் அமைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரைரெயில் நிலையத்தில் பயணிகள் நெரிசல் இல்லாமல் எளிதாக சென்று வரும் வகையில்ரெயில் நிலைய கட்டிடம் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக பார்சல் சேவை, பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்படும்.

    மதுரைரெயில் நிலைய கிழக்கு-மேற்கு நுழைவுவாயில்களை இணைக்கும் வகையில் பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைய உள்ளது. இந்த அரங்குக்கு கீழேரெயில் தண்டவாள பாதைகள் செல்லும். பயணிகள் காத்திருப்பு அரங்கில் ஓய்வு அறை, கழிப்பறை, உணவகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன.

    இந்த அரங்கில் இருந்து நடைமேடைகளுக்கு செல்வதற்காக மின் தூக்கி, எஸ்கலேட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது. 22 ஆயிரத்து 500 ச.மீ. பரப்பளவில் 4 மாடிகளுடன் கிழக்கு நுழைவுவாயில் கட்டிடம் அமைய உள்ளது. தரைதளத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படும்.

    மாடிகளில்ரெயில்வே சேவை அலுவலகங்கள் அமைக்கப்படும். மேலும் 250 வாகனங்கள் (கார்) நிறுத்தும் வகையில் கிழக்கு-மேற்கு நுழைவுவாயில் பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைய உள்ளது.

    அதேபோல 2000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட உள்ளது. பார்சல் சேவைக்காக தனி நடை மேம்பாலம் கட்டப்படும்.ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    மதுரைரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோ ரிக்சா, கார் ஆகியவை சென்று வர தனித்தனி பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர 6 நடைமேடைகளும் புதிய மேற்கூரையுடன் புனரமைக்கப்படுகிறது.

    தற்போது உள்ள 2 நடை மேம்பாலங்களும் மேம்படுத்தப்பட உள்ளது. மேற்கு நுழைவு வாயிலில் உள்ளரெயில் நிலைய கட்டிடமும் நவீன வசதிகளுடன் அமைகிறது. இந்த திட்டத்திற்கான உத்தேச செலவு ரூ. 440 கோடி ஆகும்.

    மதுரைரெயில் நிலையத்தில் மேற்கண்ட அனைத்து பணிகளையும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நடைபெற உள்ளது என்று கோட்டரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கு தங்கு தளமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன
    • ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு ஆய்வு பணியும் மேற் கொள்ளப்பட்டது

    கன்னியாகுமரி :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2008-ல் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது குளச்சல் மீன்பிடித்துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி துறைமுக பணியை தொடங்கி வைத்தார்.

    தற்போது குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கு தங்கு தளமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. தவிர இயற்கை சீற்ற காலங்களில் அருகில் உள்ள மீனவர் கிராங்களில் உள்ள விசைப்படகுகளும் இங்கு வந்து தொழில் செய்து வருகிறது. இங்கு விசைப்படகுகளை நிறுத்துவதற்கு போதிய வசதியில்லாமல் இருந்து வருகிறது. எனவே குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இத்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் என சட்டமன்ற கூட்டத் தில் முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு ஆய்வு பணியும் மேற் கொள்ளப்பட்டது.இந்நிலை யில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுக பகுதி களை பார்வையிட்டு துறைமுக விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற் கொண்டார். பின்னர் விரிவாக்க சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி னார்.

    இதில் மீன்பிடித்துறைமுக இணை இயக்குனர் காசி நாத பாண்டியன், உதவி பொறியாளர் அரவிந்த் குமார், இளநிலை பொறி யாளர் ஆஷிக், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஸ்டீபன், குளச்சல் மீன்பி டித்துறைமுக உதவி இயக்குனர் விர்ஜின் கிறாஸ், ஆய்வாளர் லிபின் மேரி, குளச்சல் நகராட்சி பொறியாளர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் மீனவர்கள் பாழ டைந்து காணப்படும் அரசு தும்பு ஆலை வளாகத்தில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க அங்கு மணல் போட்டு சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.
    • நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழும 55 ஆவது பேரவை கூட்டம் தலைவர் சலிமுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தலைவர் சலிமுதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செயலாளர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பொருளாளர் சேகர் 55வது ஆண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், நாகப்பட்டினம் பனங்குடியில் 36 ஆயிரம் கோடி ரூபாயில் சிபிசிஎல் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாகூர் சிதம்பரனார் சிறு துறைமுகம் வழியாக கொண்டு வரப்படும்.

    அந்த ஒப்பந்தத்தின் படியே விரிவாக்க பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    நாகை -தஞ்சை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்தாலும் பழைய சாலையை மேம்படுத்துவதற்கு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    தொகுதியில் நீண்ட நாள் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டுள்ள தகவல்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக அரசிற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்படும்.

    அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலம் அமைப்பதற்கு 115 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    மேம்பால பணிகள் தொடங்க டிசம்பர் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    கடல் உணவு மண்டலம் அமைப்பதற்கான பரிந்துரை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட திட்டங்களில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது..

    மற்ற துறைகளும் மாநில அளவில் முதல் 10 இடங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசு தொடங்கியுள்ள மாதிரி பள்ளிகளுக்கு வகுப்பறை மேம்பாட்டிற்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கலெக்ட ரிடம் தலைவர் சலிமுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் வழங்கினார்.

    இறுதியில் இணை செயலாளர் முகமது பகுருதீன் நன்றி தெரிவித்தார்.

    • ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி.
    • குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 15வது வார்டு மேற்கு பல்லடம் கருப்பாண்டி வீதி, பழனியப்பா வீதி, எஸ்.வி.கிளினிக் வீதி, கொசவம்பாளையம் சாலை, கிருஷ்ணப்பா வீதி, ராமசாமி ஆகிய வீதியில் ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.

    இந்த பணியை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், குட்டி பழனிசாமி,சேகர்,அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி நகருக்குள் இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.
    • புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன் தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.

    ×