search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமங்கள்"

    • தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    உடுமலை :

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தகடவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, பண்ணைக்கிணறு, கொசவம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி, கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

    குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, திட்டத்தின் நோக்கம், வேளாண் துறை சார்பில் தரிசு நில மேம்பாடு, உபகரணங்கள் மானிய விலையில் வழங்குதல், தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.

    கிராமங்களுக்கு தேவையான தடுப்பணை, குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழிகள், ரோட்டோர மரக்கன்று நடுதல், வண்டிப்பாதை, மண் சாலை அமைத்தல், உலர் களம், தானிய கிடங்கு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண்ணை குட்டை, வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.திட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், ஆமந்தகடவு - கோதண்டபாணி, கொங்கல்நகரம் -- செந்தில்குமார், சோமவாரபட்டி - ஜெயலட்சுமி, பண்ணைக்கிணறு - அசாருதீன், கொசவம்பாளையம் - கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    • திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • 6 கிராமத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவியநகர் வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    அறவழி போராட்டம்

    இந்த சாலைகளை திப்பணம்பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி, பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனை கண்டித்து 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அறப்போராட்டத்திற்கு சமூக சேவகர் காசிமணி தலைமை தாங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார் பாண்டியன், துரைசாமி, உத்திர குணபாண்டியன், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா என்ற அருள் பாண்டி, கல்லூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் மேரி மாதவன், சீனிவாசகம், அயோத்தி ராமர், பூவனூர் ஞானபிரகாசம், ஜோசப், வார்டு உறுப்பினர் சுப்புராஜ், தங்கப்பழம், சண்முக செல்வன், முருகன், அண்ணாதுரை, சண்முகம், பொன்னுதுரை, ஜெய குட்டி, அமல்ராஜ், ஜெயபால், வழக்கறிஞர் உமாபதி, வைகுண்டராஜ், காமராஜ், குத்தாலிங்கம், கவிதா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கிராமங்கள்தோறும் தி.மு.க.வின் சாதனைகளை பரப்ப வேண்டும் மாநில மாணவரணி தலைவர் பேசினார்.
    • இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராஜீவ்காந்தி. இவரை தி.மு.க. மாணவர் அணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவரை பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி, அச்சுந்தன் வயல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேர் போகி கிராமத்திற்கு வந்த இவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொதுபட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கக்கோரி இல்லம் தேடி கல்வித் திட்டம் போல பள்ளி, கல்லூரிகள்தோறும் திண்ணை பிரசாரத்தில் தி.மு.க. மாணவர் அணி ஈடுபடும். தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பரப்பு வோம். முதல்-அமைச்சரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கத்தை தயார்படுத்தி திராவிட இயக்கத்தின் சாதனைகளை கொண்டு செல்லுவோம். திராவிடம் இருந்ததால் என்னை போன்றவர்கள் சட்டக்கல்லூரி படித்து வக்கீலாக வர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு, மண்டபம் ஒன்றிய மத்திய செயலாளர் முத்துக்குமார், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார். மானாங்குடி பத்மநாதன், பெரியபட்டினம் மீரான், சேக். நாகூர்கனி, ஹரி கிருஷ்ணன், கணேசன், சம்பத்குமார், ராஜேஷ், முனியசாமி, விஜயராகவன், பாண்டி, விஜயராஜ், காளிமுத்து திருமுருகன், சக்திவேல், யாசர், அன்பரசன், பிரபா, சாலமன், கனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    • தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.
    • வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது கொளத்துப்பாளையம். இந்த பேரூராட்சிக்கு உட்பட்டது ஆலம்பாளையம், சாவடித்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் சாவடித் தோட்டத்தில் சென்னாக்கல் வலசை சேர்ந்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக உள்ள குடோன்களை வாடகைக்கு் எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று மக்காச்சோள வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.

    ஆனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள மக்கா ச்சோளத்தை எந்தவித பராமரிப்பு இன்றியும் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இருப்பு வைக்கப்படும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து அல்லது பூச்சிகளை ஒழிக்கும் மாத்திரைகளை வைத்து தார்பாய் போட்டு மூடி வைப்பது வழக்கம். ஆனால் இந்த கிடங்கில் அதுபோன்று எதுவும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்காச்சோள மூட்டைகளில் இருந்து உருவான கோடிக்கணக்காக வண்டுகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கின்றன. வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த ஆறு மாதங்களாக இந்த பகுதி கிராம மக்களை தூங்கவிடாமல் கடித்து துன்புறுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கு கை கால் அலர்ஜி ஏற்படுவது உடன் மாதவிடாய் பிரச்சனை, வயிற்று கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும். அதேபோன்று ஆண்களை இந்த பூச்சி வண்டு கடித்ததனால் நாக்கில் வறட்டு தன்மை ஏற்படுவது உடன் கை கால்கள் சிவந்து தோள்கள் மந்தமாகி அரிப்பு தன்மை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் திடிரென்று வண்டுகள் பதுங்கியிருக்கும் குடோனை 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்காச்சோளம் மூட்டைகளும் வேறு இடத்திற்கு மாற்று இடத்துக்கு எடுத்து செல்வதாகவும் இதுபோன்று பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் மக்காசோள விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

      கன்னியாகுமரி:

      குமரியின் வற்றா ஜீவநதியாக குழித்துறை தாமிரபரணியாறு உள்ளது. இந்த ஆற்றில் தான் கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம் ஆகிய தாலுகா மக்களுக்கு மட்டுமின்றி, குமரியில் சுமார் 85 சதவீத மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய குழித்துறை குடிநீர் திட்டம், பைங்குளம் குடிநீர் திட்டம், கொல்லங்கோடு ஏழுதேசம் குடிநீர் திட்டம், சுனாமி கூட்டுக்குடி நீர்திட்டம், இப்படி 50-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது.

      இந்த குடிநீர் திட்டங் களுக்கான குடிநீர் கிணறு கள் இந்த ஆற்றங்கரை யோரங்களில்தான் உள்ளது. இந்த ஆறும் கடலும் சங்கமிக்கும் தேங்காப்பட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டது. இதன் பின்னர் கடல் நீர் எளிதில் ஆற்று நீருடன் புகுந்ததால் குடிநீர் கிணறுகளில் இருந்து மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு உப்பு கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

      குடிநீர் பைப்புகளும் உப்பு நீரால் சேதம் அடைந்து வந்தது. இதனால் பரக்காணியில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 16 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த பகுதியில் பருவ மழை காலங்களில் ஆண்டுக்கு 3-க்கும் மேற்பட்ட முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை.

      இது போன்ற நேரங்களில் பரக்காணியின் மறு பகுதியில் உள்ள இடக்குடி, மரப்பாலம் வைக்கல்லூர் போன்ற கிராமங்களில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதம் அடைவதும், வீடுகள் இடிந்து விழுவதும் தொடர்கதையாக நடந்து வந்தது. அதே நேரம் தடுப்பணை பணி முடிந்தால் இந்த பாதிப்பு இருக்காது என மக்கள் கருதுகின்றனர். ஆனால் தடுப்பணை பணியை முழுமையாக முடிக்காததால் மறுபகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தடுப்பணையின் ஒரு பகுதியில் மட்டும் மண் போட்டு நிரப்பி உள்ளனர். இந்த மண்ணும் வரும் மழைக் காலங்களில் தாக்குப் பிடிக்காமல் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது.

      இந்நிலையில் தடுப் பணை மறுபகுதியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேஷ் பாபு, பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் குமார், யூனியன் கவுன்சிலர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதாவினர் தடுப்பணையை பார்வை யிட்டனர்.

      அதன்பின்னர் வரும் நவம்பர் மாதம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பணை மறுபகுதியில் மண் போட்டு நிரப்புவது மட்டுமின்றி, ஆற்றங்கரை ஓரத்தில் பக்கச்சுவர் கட்டும் பணியை உடனடி யாக தொடங்க வேண்டும் எனவும், இல்லையேல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், உட்பட பல கலந்து கொண்டனர்.

      • தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெற நடவடிக்கை
      • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

      நாகர்கோவில்:

      குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 3 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள் ளது. நடவுப் பொருள் உற்பத்தி இனத்தின் கீழ் புதிதாக திசு வளர்ப்பு கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மானியம் வீதம் ஒரு எண்ணத்திற்கு ரூ.20 லட்சம் நிதி இலக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் திறந்த வெளி மகரந்த சேர்க்கை மூலம் காய்கறிகள் மற்றும் நறுமணப் பயிர்களின் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வீதம் அரை ஹெக்டேருக்கு ரூ.17500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

      பரப்பு விரிவாக்க இனத்தின்கீழ், உயர் ரக காய்கறி குழித்தட்டு நாற்று மூலம் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி இலக்கும், பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் நடவு செய் திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 275 ஹெக்டேருக்கு ரூ.55 வட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

      அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.26,250 மானியம் வீதம் 40 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி இலக்கும், கோகோ பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக் டேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி இலக்கும், இஞ்சி பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

      நீர் ஆதார அமைப்பு உருவாக்குதல் இனத்தின் கீழ் தனிநபர் நீர் அறுவடை அமைப்பு ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் மூன்று அமைப்பிற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத் தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.6,200 மானியம் வீதம் 500 ஹெக்டேருக்கு ரூ.6 லட் சம் நிதி இலக்கும் பெறப் பட்டுள்ளது. விவசாயி களுக்கான உள் மாநில அளவிலான தோட்டக்கலை சார்ந்த பயிற்சிக்கு விவசாயி ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், மாநில அளவிலான பயிற்சிக்கு தலா ஒரு விவசாயிக்கு ரூ.10.500 வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மாவட்ட அள விலான கருத்தரங்கிற்கு ரூ.2 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவிகிதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்க ளில் செயல்படுத்தப்படும்.

      இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும். விவசாயி கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்ட கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

      இவ்வாறு கூறி உள்ளார்.

      • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
      • தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு

      கன்னியாகுமரி:

      தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுண்ஹால் வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமையில் நேற்று நடந்தது. பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் முன்னிலை வகித்தார்.

      நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :-

      தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்சி பொறுப்புக்கு வந்த நாளிலிருந்து தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குமரி மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் சென்று அப்பகுதிகளிலுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தீர்வுதளம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

      பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந் தாலும், அழகிய மண்டபம் மற்றும் கருங்கல்லில் அமைந்துள்ள எனது முகாம் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

      தீர்வு தளம் திட்டத்தின் நோக்கம் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உள் ளாட்சி அமைப்புகளின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள். நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பட்டா பிரச்னை, பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் உள்பட தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

      குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பழுநடைந்த சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

      மாவட்ட சமூக நலத்துறை அலுவவர் சரோஜினி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலா பானு, கல்குளம் வட்டாட்சியர்வினோத், அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், அரசு அலுவ லர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு வலியுறுத்தல்
      • மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.

      நாகர்கோவில்:

      கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு இயக்குனர் டன்ஸ்டன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. கடலோரப் பகுதிகளில் கனிம மணல் அள்ளுவதால் கடல் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை உள்ளது. கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

      ஆனால் அதே சமயம் நீண்ட கடற்கரையை இயற்கையாக பெற்றிருந்த குமரி மாவட்டம் அதை இழந்துவிட்டது. கடற்கரை மணல் அகழ்வு நடப்பதால் கதிரியக்கம் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோயால் கடற்கரை மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

      மணல் ஆலைக்கு அருகில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் ஆண்டிற்கு ஏறக்குறைய 100 பேர் புற்றுநோய்க்கு உயிரிழந்து வருகிறார்கள். எனவே கடலரிப்பு மற்றும் கதிரியக்க பாதிப்புகளை உருவாக்கும் மணல் ஆலையை உடனே மூடவேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

      இந்த நிலையில் தமிழக அரசு மணல் ஆலை நிறுவனத்துக்கு கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து 1144 ஹெக்டேர் நிலப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதி மக்களிடம் எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் இந்த அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

      மக்களிடம் கருத்து கேட்டு இருந்தால் நாங்கள் குறைகளை தெரிவித்து இருந்தி ருப்போம். எனவே சுற்றுச்சூ ழலுக்கும், மக்கள் உயிருக்கும், கடற்கரை கிராமங்க ளுக்கும் அழிவை ஏற்படுத்தும் மணல் அகழ்வு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

      மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் அனுமதியை ரத்து செய்யவில்லை எனில் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

      பேட்டியின் போது பங்குதந்தை சூசை ஆன்டனி, மீனவர் பிரதிநிதிகள் பிரான்சிஸ், சேவியர் மனோகரன், மரிய தாசன், மெர்பின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

      • வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
      • பரமத்திவேலூர் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

      நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமில் விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி முகாமினை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

      நடப்பாண்டில் பரமத்தி வட்டாரத்தில் நல்லூர், இருட்டணை, வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கட்ட முறையில் மண் மாதிரிகள் இறவைப்பாசன நிலங்களிலிருந்து 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவாரி நிலங்களில் 10 ஏக்கருக்கு ஒரு மண்மாதிரியும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

      ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      நாமக்கல் தரக்கட்டுப்பாடு, வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்திட வந்த விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை அன்றைய தினமே பெற்றனர்.

      விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராஜன், அன்புசெல்வி, அருள்ராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண்வள அட்டையாக வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி செய்திருந்தனர்.

      • கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
      • நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 எக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

      கோவை:

      கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

      இக்கிராம ஊராட்சிகளில் குறைந்தபட்சம் 15 ஏக்கா் தரிசு நிலம் மற்றும் குறைந்தபட்சம் 8 விவசாயிகள் அடங்கிய தொகுப்புகள் அமைக்க வேண்டும். அதன்படி அன்னூா் வட்டாரத்தில் ஆம்போதி, அ.செங்கம்பள்ளி, வட வள்ளி, பெரியநாயக்க ன்பாளையம் வட்டாரத்தில் நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரத்தில் புரவி பாளையம் ஆகிய 5 கிரா மங்களில் 5 தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

      இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்துக்கு 460 எக்டோ் பரப்புக்கு பசுந்தாள் உரப்பயிா் விதைகள் 23 மெட்ரிக் டன் விநியோக இலக்காகப் பெறப்பட்டுள்ளது. நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 எக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

      தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை நடப்பு ஆண்டில் பரப்பு விரிவாக்கம் செய்யும் பொருட்டு மொத்த இலக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 725 எக்டோ் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

      பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் 2022-2023-ம் ஆண்டுக்கு 3,253 எக்டோ் பொருள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

      மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 470 எக்டோ் பொருள் இலக்காகவும், ரூ.115.63 லட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணையத் திட்டம், ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவித்தல், உயா் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்தல், ஹைட்ரோ போனிக்கஸ், செங்குத்துத் தோட்டத்தளைகள், உழவா் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி பயிா் சாகுபடி ஊக்குவிக்க பயிா் ஊக்கத் தொகை, முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க தளைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • நிலஅளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
      • பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

      திருப்பூர் :

      நில அளவைத்துறையில் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், செம்மைப்படுத்தவும், இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் (ஓ.பி.டி.-ஐ.எஸ்.டி.) மனுக்களில் கிராம நிர்வாக அதிகாரிகளை ஈடுபடுத்தி உட்பிரிவு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

      இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1-4-2021 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட தாலுகா மற்றும் கிராமங்களில் கிரையம் பெற்ற பொதுமக்கள், இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான நிலஅளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

      இதன்படி அவினாசி தாலுகாவில் புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், பட்டம்பாளையம் கிராமம், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமம், தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் வடக்கு, வீராச்சிமங்கலம், கொளிஞ்சிவாடி, தாராபுரம் தெற்கு, தூரம்பாடி, சின்னமருதூர், காளிபாளையம், கண்ணங்கோவில், சங்கராண்டம்பாளையம், புங்கன்துறை, மாம்பாடி, நாதம்பாளையம், காங்கயம்பாளையம், செலாம்பாளையம், பொம்மநல்லூர், முளையாம்பூண்டி, எரிசனம்பாளையம், புஞ்சைத்தலையூர், நஞ்சைத்தலையூர், சேனாபதிபாளையம், வேலாம்பூண்டி, சுண்டக்காம்பாளையம், அரிக்காரன் வலசு, எடக்கல்பாடி, நாரணாபுரம், தொப்பம்பட்டி, மடத்துப்பாளையம், கொக்கம்பாளையம், மானூர்பாளையம், முத்தையம்பட்டி, பெரியகொமாரபாளையம், கெத்தல்ரேவ், ஜோதியம்பட்டி கிராமங்கள்.

      காங்கயம் தாலுகாவில் தம்மரெட்டிப்பாளையம், வடசின்னாரிபாளையம்,சம்பந்தம்பாளையம், குருக்கம்பாளையம், மரவபாளையம், கீரனூர், மருதுறை, பழையகோட்டை, மங்கலப்பட்டி, பூமாண்டம்வலசு, ராசாத்தாவலசு, உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி கிராமங்கள்.

      உடுமலை தாலுகாவில் குறுஞ்சேரி, அந்தியூர், வெனசப்பட்டி, கணபதிபாளையம், வேலூர், வடபூதிநத்தம், தென்பூதிநத்தம், லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னக்குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, போகிகவுண்டன்தாசரிபட்டி, ஆலம்பாளையம், குருவப்பநாயக்கனூர், தும்பலப்பட்டி, கல்லாபுரம், சின்னபாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம், ராவணாபுரம், வலையபாளையம், எரிசனம்பட்டி, தின்னப்பட்டி, பெரியவாளவாடி, சின்னவாளவாடி, சர்க்கார்புதூர், ரெட்டிப்பாளையம், ஜில்லோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், தீபாலப்பட்டி, மொடக்குப்பட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, குப்பம்பாளையம், மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம், வாகைத்தொழுவு, வீதம்பட்டி, புதுப்பாளையம், தொட்டம்பட்டி, பண்ணைக்கிணர் கிராமங்கள்.

      மடத்துக்குளம் தாலுகாவில் கொழுமம், சோழமாதேவி, சர்க்கார் கண்ணாடிபுத்தூர், கொமரலிங்கம் கிழக்கு, சங்கராமநல்லூர் வடக்கு, கடத்தூர், கணியூர் கிராமங்கள். ஊத்துக்குளி தாலுகாவில் அ.பல்லகவுண்டன்பாளையம், ரெட்டிபாளையம், வடமுகம் காங்கயம்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரகார கந்தாங்கண்ணி, சர்க்கார் கந்தாங்கண்ணி, கொமரகவுண்டன்பாளையம், நல்லி கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், புதுப்பாளையம், நெட்டிச்சிப்பாளையம், கம்மாளக்குட்டை, குன்னத்தூர், செட்டிக்குட்டை, சின்னியம்பாளையம், நவக்காடு, செங்காளிபாளையம், எருமைக்காரம்பாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள் இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான நில அளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

      இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

      இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
      புதுடெல்லி:

      நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. 

      பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து  கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம்  ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.



      தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை. 

      தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. 
      ×