search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை
    X

    கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை

    • தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெற நடவடிக்கை
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 3 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள் ளது. நடவுப் பொருள் உற்பத்தி இனத்தின் கீழ் புதிதாக திசு வளர்ப்பு கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மானியம் வீதம் ஒரு எண்ணத்திற்கு ரூ.20 லட்சம் நிதி இலக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் திறந்த வெளி மகரந்த சேர்க்கை மூலம் காய்கறிகள் மற்றும் நறுமணப் பயிர்களின் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வீதம் அரை ஹெக்டேருக்கு ரூ.17500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

    பரப்பு விரிவாக்க இனத்தின்கீழ், உயர் ரக காய்கறி குழித்தட்டு நாற்று மூலம் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி இலக்கும், பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் நடவு செய் திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 275 ஹெக்டேருக்கு ரூ.55 வட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.26,250 மானியம் வீதம் 40 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி இலக்கும், கோகோ பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக் டேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி இலக்கும், இஞ்சி பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    நீர் ஆதார அமைப்பு உருவாக்குதல் இனத்தின் கீழ் தனிநபர் நீர் அறுவடை அமைப்பு ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் மூன்று அமைப்பிற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத் தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.6,200 மானியம் வீதம் 500 ஹெக்டேருக்கு ரூ.6 லட் சம் நிதி இலக்கும் பெறப் பட்டுள்ளது. விவசாயி களுக்கான உள் மாநில அளவிலான தோட்டக்கலை சார்ந்த பயிற்சிக்கு விவசாயி ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், மாநில அளவிலான பயிற்சிக்கு தலா ஒரு விவசாயிக்கு ரூ.10.500 வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மாவட்ட அள விலான கருத்தரங்கிற்கு ரூ.2 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவிகிதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்க ளில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும். விவசாயி கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்ட கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    Next Story
    ×