search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK achievement"

    • செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பஸ் நிலை யம் அருகே அ.தி.மு.க. சார்பில் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் பிரபு, முன்னாள் காமராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்கு றிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாள ரும், திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அறங்காவலர் குழு பிரதி நிதியுமான குமரகுரு தலைமை தாங்கி பேசிய தாவது:-

    நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளோம். எனவே மக்கள் பிரச்சனைகளை சொல்லு கிறோம். ஆளுங்கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்க்கு கொண்டு வந்த திட்டங்களை மேடையில் சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சியில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் வாங்கி ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முறைகேடாக கொள்ளையடித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி யை சிறை வைப்போம் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி னார். அதுதான் தற்போது நடந்துள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான். தற்போது ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களை மிரட்டி கொத்தடிமை போல் வைத்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றினார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் பல்வேறு மக்கள் திட்ட பணிகள் எடப்பாடி ஆட்சி யின் போது கொண்டு வரப் பட்டன. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டும் பணி, ெரயில் பாதை அமைக்கும் பணி, வெளிவட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவை கிடப்பில் போடப் பட்டுள்ளன. இந்த பணி களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இல்லை யெனில் அ.தி.மு.க .மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து தமிழக அரசை கண்டித்துகண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப் பிள்ளை, ஒன்றிய செயலா ளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞான வேல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில்தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜ சேகர் நன்றி கூறினார்.

    • கிராமங்கள்தோறும் தி.மு.க.வின் சாதனைகளை பரப்ப வேண்டும் மாநில மாணவரணி தலைவர் பேசினார்.
    • இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராஜீவ்காந்தி. இவரை தி.மு.க. மாணவர் அணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவரை பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி, அச்சுந்தன் வயல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேர் போகி கிராமத்திற்கு வந்த இவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொதுபட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கக்கோரி இல்லம் தேடி கல்வித் திட்டம் போல பள்ளி, கல்லூரிகள்தோறும் திண்ணை பிரசாரத்தில் தி.மு.க. மாணவர் அணி ஈடுபடும். தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பரப்பு வோம். முதல்-அமைச்சரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கத்தை தயார்படுத்தி திராவிட இயக்கத்தின் சாதனைகளை கொண்டு செல்லுவோம். திராவிடம் இருந்ததால் என்னை போன்றவர்கள் சட்டக்கல்லூரி படித்து வக்கீலாக வர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு, மண்டபம் ஒன்றிய மத்திய செயலாளர் முத்துக்குமார், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார். மானாங்குடி பத்மநாதன், பெரியபட்டினம் மீரான், சேக். நாகூர்கனி, ஹரி கிருஷ்ணன், கணேசன், சம்பத்குமார், ராஜேஷ், முனியசாமி, விஜயராகவன், பாண்டி, விஜயராஜ், காளிமுத்து திருமுருகன், சக்திவேல், யாசர், அன்பரசன், பிரபா, சாலமன், கனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    ×