search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.செய்த ஒரே சாதனை செந்தில்பாலாஜியை கைது செய்ததுதான்மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு
    X

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினார். அருகில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் உள்ளார்.

    தி.மு.க.செய்த ஒரே சாதனை செந்தில்பாலாஜியை கைது செய்ததுதான்மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு

    • செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பஸ் நிலை யம் அருகே அ.தி.மு.க. சார்பில் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் பிரபு, முன்னாள் காமராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்கு றிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாள ரும், திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அறங்காவலர் குழு பிரதி நிதியுமான குமரகுரு தலைமை தாங்கி பேசிய தாவது:-

    நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளோம். எனவே மக்கள் பிரச்சனைகளை சொல்லு கிறோம். ஆளுங்கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்க்கு கொண்டு வந்த திட்டங்களை மேடையில் சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சியில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் வாங்கி ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முறைகேடாக கொள்ளையடித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி யை சிறை வைப்போம் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி னார். அதுதான் தற்போது நடந்துள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான். தற்போது ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களை மிரட்டி கொத்தடிமை போல் வைத்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றினார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் பல்வேறு மக்கள் திட்ட பணிகள் எடப்பாடி ஆட்சி யின் போது கொண்டு வரப் பட்டன. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டும் பணி, ெரயில் பாதை அமைக்கும் பணி, வெளிவட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவை கிடப்பில் போடப் பட்டுள்ளன. இந்த பணி களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இல்லை யெனில் அ.தி.மு.க .மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து தமிழக அரசை கண்டித்துகண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப் பிள்ளை, ஒன்றிய செயலா ளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞான வேல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில்தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜ சேகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×