search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு பணிகள்"

    சுற்றுலா அமைச்சர் தொடங்கி வைத்தார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், கோடமலை-ஒசட்டி பகுதியில் முதலமைச்சர் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதனை சுற்றுலாதுறை அமைச்சர்ராமசந்திரன் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெ.பிரேம்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா, துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்ட பாணி உள்பட பலர் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரும் ஆண்களுக்கான கழிவறை கட்டிடங்களையும், ரூ.16.60 லட்சம் மதிப்பில் பெண்க ளுக்கான கழிவறை கட்டி டங்களையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.48.75 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 முதல் பனைநகர் வரை சாலை அமைக்கப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.4.65 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் அறையையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    பின்னர், சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவி களுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட பலர் இருந்தனர்.

    • பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
    • ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சேவையாக ரெயில்வேத்துறை உள்ளது. இதனாலேயே ரெயில்வே துறையை மத்திய அரசு நவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு ரெயில் நிலையங்கள் புனர மைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல குமரி மாவட்டத்தி லும் கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்கள் மேம்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    அந்த வகையில் நாகர்கோ வில் ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதிகள் தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப்பட உள்ளன.

    இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    நாகர்கோவிலில் அடிக்கல் நாட்டு விழாவானது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் எஸ்.எம்.சர்மா தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

    விஜய்வசந்த் எம்.பி. பேசுகையில், "நாகர்கோவில் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் டவுன் ரெயில் நிலையத்தையும் நவீனப்படுத்த வேண்டும். குமரி மாவட்ட மக்கள் அதிக அளவு ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அதற்கு ஏற்றார் போல கூடுதல் ரெயில்களை குமரி மாவட்டத்துக்கு இயக்க வேண்டும்" என்றார்.

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி உலக நாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும் ரெயில் சேவையை நவீனப்படுத்தி வருகிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மேயர் மகேஷ் பேசுகையில், " குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரம் 3 முறை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தினசரி ரெயிலாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி- நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருநெல்வேலி இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரெயில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மீண்டும் கோவை வருகிறது.

    எனவே அந்த ரெயிலை நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, திருச்சி வழியாக இயக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்." என்றார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் மந்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டு கழகம் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து புணரமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக ரூ.4.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா திற்பரப்பு அருவி அருகில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட பல சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டமாகும். திருவட்டார் தாலுகா இயற்கை வளத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுலாவிற்கும் பெயர் பெற்றது. தெற்கு ஆசியாவின் மிக உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி மாவட்டத்தில் தான் அமைந் துள்ளது.

    வரலாற்று சிறப்புமிக்க உதயகிரி கோட்டையும் மிக அருகிலேயே அமைந்துள்ளது. அதனால் தான் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும் இணைந்து மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்ப டுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 2021-2022 மாநில அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் சிற்றாறு-2 அணை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங் கப்படவுள்ளது.

    மேலும் திருவள்ளுவர் சிலை ரூ.11.98 கோடியில் திருவள்ளுவர் சிலையில் லேசர் லைட் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட உள்ளது. முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் அடிக் கல் நாட்டப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறைக்கும் அதிக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும்,விவேகானந்தர் சிலைக்கும் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், சுற்றுலாஅலுவலர் சதீஷ்குமார், சுற்றுலா வளர்ச்சி கழக செயற் பொறியாளர் சீனிவாசன், திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, அரசு வழக்கறிஞர் ஜாண்சன், திற்பரப்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ஜான்எபனேசர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
    • ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு

    ஜோலார்பேட்டை:

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடு வாஞ்சேரி ஜோலா ர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அதற்கான பணிகளை ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த காணொளி காட்சி மூலம் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கோவளம் மற்றும் ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் பணியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் தாமரைபாரதி, கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சங்கர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய பொறியாளர் ஹெலன், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதா பாஸ்கர், ரமேஷ், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.]

    • வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.
    • 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டைகளை மேயர் மகேஷ் வழங்கினார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப் பன், நவீன்குமார், மேரி ஜெனட் விஜிலா, அக்‌ஷ்யா கண்ணன், அனிலா சுகுமா ரன், அருள் சபீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக்கப் பட்ட 1, 2, 3, 50, 51, 52 வார்டுகளில் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 5 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரி களை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 274 சாலைகளை சீரமைக்க ரூ.64 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப டும் என்றார்.

    இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொருட்காட்சி மைதானத்தில் உள்ள மணல்களை அப்புறப்படுத்த ரூ.23 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.

    இதற்காக அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். தற்பொழுது மின்விளக்கு பிரச்சனைகள், வீடுகளில் குப்பை எடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.ஆனால் ஓடைகளில் உள்ள குப்பைகள் சரிவர எடுக்கப்படவில்லை. சாலைகளும் மிகவும் பழுதாகி உள்ளது. அந்த சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கான பட்ஜெட் டில் ரூ.2.50 கோடி பற்றாக்குறை என தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில செலவினங்கள் எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பதை விரிவாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. இது போல செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி வாகனங்களை பழுது பார்க்க ஒர்க் ஷாப் அமைக்க வேண்டும்.

    வலம்புரி விளை குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தினால் வட்டவிளை பகுதி மக்கள் பாதிக்கப்ப டுகிறார் கள். பலர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.எனவே குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோணம் முதல் எறும்பு காடு வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது‌. கேப் ரோடு , மீனாட்சிபுரம் சாலை உள்பட மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். அனைத்து சாலைகளும் இரு வழி சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும்.

    இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்‌. சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை விரைவில் சீர மைக்கப்படும். நாகர் கோவில் மாநகராட்சியில் உள்ள வாகனங்களை பராமரிக்க ஒர்க் ஷாப் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வலம்புரி விலை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 1 கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி தேவைப்படுகிறது.நாகர்கோவில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி யை இந்தியாவிலேயே முதல் மாநகராட்சியாக மாற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    ×