search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

    • விருதுநகர் ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்ட பாணி உள்பட பலர் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரும் ஆண்களுக்கான கழிவறை கட்டிடங்களையும், ரூ.16.60 லட்சம் மதிப்பில் பெண்க ளுக்கான கழிவறை கட்டி டங்களையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.48.75 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 முதல் பனைநகர் வரை சாலை அமைக்கப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.4.65 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் அறையையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    பின்னர், சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவி களுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×